Thursday, July 14, 2022

**ஏக்கம்..**

 









மறுபிறவியே
வேண்டாம் என
இருந்த நான்
உன்னுடன் முழு
ஆயுளும்
வாழ்வதற்காகவே
மீண்டும் ஒரு
பிறவி கிடைக்காதா
என ஒரு ஏக்கம்
இப்பொழுது...!!

முடிந்தவரை
பிரியத்தை
மட்டுமே சேமித்து
வைக்கின்றேன்
உன்னை
ஆயுள்வரை
பிரியாமல்
இருப்பதற்காக...!!

Thursday, June 16, 2022

இதழில் சுமந்து கொள்...!! 

 









அடிக்கடி அடி

நொடி நொடி 

அணை - கைகளை 

இறுகப்பற்றி

காதல் சேர்..!! 


தோளில் சாய்

தூரம் போகையில்

துணையாய் அழை

எங்கிருந்தாலும் 

எஸெமெஸ் போடு

சிரிப்பை மட்டும் 

இதழில் சுமந்து கொள்...!! 


இதயம் கனக்க 

எனையும் ஏந்திச் செல்

ஸ்பரிசங்கள் காட்டு

உரிமைகள் கூட்டு

சில நேரம் சோர்வேன்

தலை கோதி

தூங்க வை...!!

Tuesday, June 14, 2022

பொழிந்து செல்கிறாய்..!!

 









ஒரு உண்மையான
காதலை நீ
எவ்வளவு தான்
காயப்படுத்தினாலும்
அது மறுபடியும்
உன்னை இன்னும்
அதிகமாக நேசிக்குமே தவிர
உன்னை விட்டு
விலகி செல்லாது...!!

உன்னிடம் எதையும்
எதிர்பார்க்காத
நேரத்தில் - உன்
அன்பை வெளிப்படுத்தினாய்
இன்று உன்
அன்பை மட்டும்
எதிர்பார்க்கின்றேன் நீயோ
வெறுப்பை மட்டும்
பொழிந்து செல்கிறாய்..!

என் நண்பியிடம்
நீ கூறிய
வார்த்தைகள் என்
காதலை நீ காலடியில்
சிதைப்பதாக
இருந்தாலும் அதனால்
நீ சந்தோசம்
அடைகின்றாய் என்றால்
அப்படியே இரு
உன் சந்தோசத்தில்
வாழ்ந்து விட்டு
போகின்றேன் - என்
ஆயுள் உள்ளவரை..!!

Friday, June 10, 2022

** நீ பூக்கிறாயே...**













பிறப்பின் தருணம் 

உணர்ச்சி பூர்வமானது
அது ஒவ்வொரு
வருடமும் வந்து
செல்லும் போது
மிகவும் அழகாகிறது…!

ஒரு முறை
குறிஞ்சி மலர் பூக்க
பன்னிரண்டு வருடம்
ஆகுமென்றால்
அது பொய்தானே..,
வருடம் ஒரு முறை
குறிஞ்சி மலராய்
உன் பிறந்த நாளில்
நீ பூக்கிறாயே...!

உன்னுடைய இந்த
மகத்தான நாளிலே
நீ  பூமிக்கு வந்துதித்த
இந்நாளிலே-என்
இனிய வாழ்த்துக்களை
என் வரிகளில் பரிமாறுகிறேன்..!!

இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்…🎂🌹 


Thursday, June 9, 2022

பொய்யாகியதே...!!









பெரிதான ஆசை
எனக்கில்லை..,
இறுதிவரை
என்னுடன்
பேசுவாய் என
கூறிய சத்தியம் கூட
பொய்யாகியதே...!!

அன்று உன்னுடன்
தூங்காமல்
பேசியதால் என்னவோ
இன்று நிம்மதியாக
தூங்க முடியாமல்
தவிக்கின்றேன்...!!

ஒவ்வொரு முறையும்
உன்மீது வைத்துள்ள
அன்பை வெளிப்படுத்த
நினைப்பது உண்மையில்
தற்கொலையை விட
கொடுமையானது...!!

ஆயுள் எல்லை வரை...!!









அன்புடன் தான்
என்னுடன் பேசி
பழகினாய் என
இத்தனை நாளாக
சந்தோசமாக
இருந்தேன் - ஆனால்
கடமைக்காகவே
என இன்று
தெரியப்படுத்தினாய்...!

என் அன்பு உனக்கு
புரியவில்லை என்றாலும்
பரவாயில்லை - நீ
உனக்கு பிடித்தவர்களுடன்
சந்தோசமாக இரு...,
உன் சந்தோசம்
ஒன்றே போதும் - என்
ஆயுள் எல்லை வரை...!!

Monday, June 6, 2022

!! அதே அன்புடன்..!!


 





அன்று என்னோடு
நீ இல்லை - என்
காதலும் நீ
அறியவில்லை..,
இன்று அறிந்தும்
அறியாதவன் போல்
உன்னால் இலகுவாக
தூக்கியெறிய
முடிகின்றதல்லவா..!!

உன்னுடன் பேசாமல்
இருக்கின்றேனே
தவிர - உனை
நினைக்காமல்
ஒருபோதும்
இருந்ததில்லை...!!
நீ பேசும் நொடிவரை
காத்திருப்பேன் - அதே
அன்புடன்..!!

Tuesday, May 31, 2022

முடியுமா என்னால்...!!










உனை உண்மையாக 

நேசித்தது நான் 

செய்த தவறா..

பேசாமல் இருக்க

உன்னால் முடியும்

என்றால் - நீ

தேடி வந்து

பேசும்வரை 

என்னால் இருக்க

முடியும் என

நினைக்கின்றாயா...!! 


விரல் கோர்த்திடும் 

காதல் தேவையில்லை

தூரமாய் நீ

இருந்தாலும்..,

உள்ளமுருகி 

உள்ளத்தால் 

எல்லா நாளும்

உனை நினைக்கும் 

காதல் போதும்...!! 


இலகுவாக 

எனை நீ 

மறந்து விட்டாய்..,

ஆனாலும் மனம்

ஏங்குகின்றது 

என்னிடம் 

சொல்லிவிட்டு 

சென்றிருக்கலாமே

என்று...!!

Monday, May 30, 2022

உயிரோட்டமாய் என் காதல்...!!








உன் மீதான
காதலினால் எதை வேண்டுமானாலும்
விட்டுக் கொடுப்பேன்
ஆனால்....,
உனக்கொரு
பிரச்சினையாக
நான் எப்போதும்
இருக்க மாட்டேன்..!!

வார்த்தைகளால்
சொல்லாத காதல்
சொன்னதும்
முறிந்ததும் ஏனோ...!!

என் ஒவ்வொரு
வரிகளிலும்
வாழ்ந்துவிட்டு
போகட்டும் - உயிரோட்டமாய்
என் காதல்...!!





Thursday, May 19, 2022

இறக்கும் வரை தொடரும்..!














உன் காதல்
போலியாக இருக்கலாம்
பொய் என தெரிந்தும்
உன் போலியான
காதலைக் கூட
சுமக்க விரும்புகிறது
என் மனம்-காரணம்
என் காதல்
உண்மையானதால்..!

உன் மீதான
என் காதல்
நீ இருக்கும்
வரையல்ல - நான்
இறக்கும் வரை
என்றும் தொடரும்..!

Wednesday, April 20, 2022

ஏன் இந்த சாபம்..!!



நீ என்னை விட்டு 

தூரமாக இருப்பதனால்

உன் மீதான காதல்

முடிந்து விடும் என 

நினைத்தேன்..!


அழுது கொண்டே

இருப்பதனால் 

என் கண்ணீர் 

முடிந்து விடும் என

நினைத்தேன்..!


உன்னை நினைத்துக்

கொண்டிருப்பதால்

உன் ஜாபகங்கள்

முடிந்து விடும் என

நினைத்தேன்..!


உன்னை பற்றி 

எழுதிக் கொண்டிருப்பதால்

என் கவிதைகள்

முடிந்து விடும் என

நினைத்தேன்..!


எதுவுமே முடிந்தது போல்

தெரியவில்லை - எல்லாமே

அதிகமானது போன்றே 

இருக்கின்றது..!


எனக்கு மட்டும் ஏன் 

இந்த சாபம் - நான்

என்னையே கொல்லும்

இந்த என் ஜென்மம்

என் மரணத்தில் 

என் கவிதைகளுடன்

முற்றுப் பெறும்..!

Sunday, February 13, 2022

நிரூபித்து விட்டாயே...!



என் எண்ணமெல்லாம் உன்னை

உயர்ந்த இடத்தில் வைத்து

பார்த்தேனே தவிர - என் மீது 

உனக்கு துளி அளவும் 

காதல் இல்லை என்பதை 

ஒரே நொடியில்

உணர்த்தி விட்டாயே...!


மனதில் காதலுடன் உனை 

ஒருபோதும் ஆசை வார்த்தையுடன்

செல்லம் - குட்டி என்று 

அழைத்தது கூட இல்லை

உனை பெயர் கூறி

அழைத்தது கூட தவறென்று கூறி

உன் மனதில் சிறு ஓரத்தில் கூட

நானில்லை என்பதை 

நிரூபித்து விட்டாயே...!
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.