மைகொண்டு புருவத்தைத்
தீட்டுவது போல் - உன்
விழிகொண்டு எனது இதயத்தைத்
தீட்டுகின்றாய்...
பூக்களின் வாசத்தை நுகர்ந்த
என் நாசி இன்று உன்
வியர்வையின் வாசத்தை
நுகர்கின்றது...
சாக்கடை நாற்றம் கூட
ரோஜா வாசத்தைத் தாங்கி
வருகின்றது உன்னோடு
நான் இருக்கையில்...
மாலைக் காற்று
காலைக் காற்றோடு
கைகோர்த்து வருகின்றது
உனக்கு துதிபாட...
தொலைக்காட்சியில் மூழ்கின்றேன்
காணும் பாடல் காட்சிகள்
அனைத்திலும் நீயும் நானும்....
கனவில் சுற்றுகின்றோம்
அகிலம் முழுதும்
நிழல் ஒர் நாளில்
நிஜமாகும் என்ற ஆசையில்
கனவு கலைந்து உன்னை
என்னுள் புதைக்கின்றேன்
நிஜத்தில்...
உன் குரல் கேட்டதில் இருந்து
என் குரல் கேட்க வில்லை
எனக்கு....
உன் உருவம் கண்டதில் இருந்து
வேறு உருவம் காட்டவில்லை
என் கண்கள் எனக்கு...
உன்னைத் தவிர மற்றவைகள்
அனைத்தும் குருடன் பார்வையில்
கலர்ப் படமாய் தோன்றுகிறது....
என் நிழலில் கூட - உன்
நிழல் நிழலாடுகின்றது...
என் நிஜத்தில் - உன்
நிஜம் நிந்திக்கின்றது...
Wednesday, October 31, 2007
நிழலாடும் நிஜம்
கடலில் கலந்த மழைத்துளியாய்
மனம் என்னும் நிலத்தில்
காதல் கோலம் போட்டு விட்டாய்
அழகாய்...
அழகுக்குள் ஒர் அழகாய்
உன் காதல் என்னை
அழகுபடுத்த ஆர்பாரித்து நிற்கின்றேன்
கடலலைகள் போல்...
உன் காதல் மாற்றியது
இவ்வுலகை அழகாய் - என்
கண்களுக்கு மட்டும்
மீனாய் நீந்தி திரிந்தேன்
உன் அன்பெனும் கடலில்...
முத்தாய் கொட்டும் உன்
சிரிப்பை அள்ளிக் கோர்த்தேன்
மாலையாய்..
மாலைச்சூரியன் நிலவைப்
பரிசளித்துச் சென்றுவிட
ஆனந்தக் குக்கூரலிட்டன
விண்மீன்கள் குளிர்ச்சியில்...
நிலவின் ஒளியில்
உன் நினைவின்
துணையில் இரவின்
தனிமையில் இன்றைய
நினைவுகளை கவிதை
புனைந்து கொண்டிருந்தன
மனம்...
காற்றுக்கு கூட வேலி போட முடியும்
அன்பே ஆனால் உன் நினைவுகளுக்கு
வேலிபோட முடியவில்லையே...
ஆழ்ந்த உறக்கத்தில் கூட
சிரிக்கின்றேன் ஆழமாய் உற்று
நோக்கினேன் என்னுள் - நீ
இரண்டறக் கலந்து விட்டாய்
கடல்நீரில் கலந்து விட்ட
மழைத்துளியாய்...
அன்புத் தோழி
காற்றடித்தால் கலைந்து போய்
பின் சேர்ந்து கொள்ளும் மேகம்
போன்றதல்ல எம் நட்பு..
ஒரு முறை போனால் திரும்பவும்
உடலோடு வந்து சேராத
உயிரைப் போன்றது
எம் நட்பு..
என் கோபத்தில் கூட துளிர்க்கிறது
உன் மேலான என் அன்பு
இரு கரங்கள் கொண்டு
பிண்ணிப் பிணைக்கப்பட்ட
இரு இதயங்களின்
வார்த்தைப் பரிமாறல்
எம் நட்பு...
உன் மனதினை நோகடிப்பவர்களை
நான் விரட்டுக்கின்றேன்
என் மனதில் இருந்து
என் உறவாய் இருந்தாலும்
இந்தக் கோபம் வேண்டாம்
என்கின்றாய் நீ அடிப் போடி
என் கோபமே உன் மேலான
அன்பின் நிமித்தம்
உருவானதல்லவா...
வயது பார்த்து வசதி பார்த்து
உருவம் பார்த்து வந்ததல்ல
எம் நட்பு - என்
கண்கள் உன் உருவத்தை
நேரில் கண்டதில்லை இதுவரை
என் இதயம் ஓவ்வொரு நிமிடமும்
தரிசித்துக் கொண்டிருக்கிறது உன்
அன்பான உருவத்தை
ஒவ்வொரு நொடிப்பொழுதும்...
Tuesday, October 30, 2007
இறுதிவரை இணைவோம்
கண்கள் கண்டு இதயம் தீண்டும்
காதலைக் காட்டிலும்
இதயம் கண்டு கண்ணைத்
தீண்டும் நட்பு கடவுளை விடச்
சிறந்தது..
என் மனதின் மெளனம் நீயறிவாய்
உன் மனதின் மொழிகள்
நானறிவேன்..
எங்கள் இதயங்கள் பேசிக்கொள்கின்றன
வார்த்தைகள் மெளனிக்கும்
போது...
என் சோகங்களை நீ உள்வாங்கி
சந்தோஷங்களை பரிசளித்தாய்..
உன் வாழ்வின் இனிமைகள்
என் வாழ்வின் இனிமைகள்...
தென்றல் தழுவும் மலராய்
உன்னை இன்பங்கள்
தழுவட்டும்...
தோழியே என் ஓவ்வோர்
அசைவிலும் உன் விம்பம்....
என் ஆயுளின் கடைசிவரை
எமக்குள் இருக்கும் இந்த
உயிர்ப் பந்தம்.....
உன் கண்களில் கலக்கம் - என்
உயிரினில் நடுக்கம்...
பிரிவென்ற சொல்லை விடுத்து
உயிர் என்ற சொல்லோடு
பிண்ணிப் பிணைவோம்......
Monday, October 29, 2007
இதயம் கண்டதால்
தென்றலோடு கதைபேசும்
பூக்கள் காம்பை விட்டு
உன் கரங்களுக்குள்
புகுந்து கொள்கின்றன
பச்சிலம் பாலகன் போல்
தஞ்சம்..!
என் இதயம் பறக்கத்
துடிக்கின்றது - உன்
இதயத்திடம்
தடை போடுகின்றது
என் நாணம்..!
சுகந்தம் வீசும்
மலர்கள் கூட
நறுமணம் இழந்து
தவிக்கின்றன உன்
கேசத்தின் சுகந்தத்தின்
முன்னால்..!
வானவில்லின் நிறங்களைப்
பிழிந்து என் வாழ்வை
வர்ணமயமாக்கி
வானவில்லை நிறமற்றதாய்
மாற்றிச்சென்று விட்டாயடா..!
ஒளிரும் விளக்கில்
உன் முகம் அழுத்த
தயங்குகின்றது விரல்கள்
ஆழியை...
படிக்க நினைத்ததை
மறந்து பாடித்
திரிகின்றேன் - உன்
பல்லவியை..!
பற்றியெரியும் வீடு
தீக்குச்சியாய் தோன்ற
தீக்குச்சி தோன்றுகின்றது
பற்றியெரியும் காடாய்..!
கண்கள் உன்னை
கண்டதால் - நீ
என் இதயத்துக்குள்
நுழையவில்லை
இதயம் உன்னைக்
கண்டதால் கண்களுக்குள்
நுழைந்து கொண்டாய்..!
இரவு நேர நினைவு
அமைதியான
இரவு நேரம்
கண் சிமிட்டும்
நட்சத்திரங்கள் குளிர்ச்சியான
வெளிச்சத்தை பாய்ச்சி
கொண்டிருக்கும் நிலவு
இந்த ரம்மியமான
இரவுப் பொழுதை
குலைத்து கொண்டிருந்தன
நாய்களின் ஈனக் குரல்கள்..!
வானத்து நட்சத்திரங்கள்
தமது ஜோடிகளை தேடி
நகர்ந்து கொண்டிருந்த வேளை
என் மனதும் அவனது நினைவுகளை
காவியமாக்க ஒன்றின் மேல் ஒன்றாக
அடுக்கிக் கொண்டிருந்தன
நினைவுப்படிகளை..!
இரவு நேர தென்றல் காற்று
அவனது மூச்சுக்
காற்றை ஞாபகப்படுத்த
தவழ்ந்து வரும்
குழந்தையை
அரவணைக்கும் அன்னை போல்
நினைவுகள் - என்
இதயத்தை அரவணைத்துக்
கொண்டன..!
வெட்ட வெளியாய் - இரவுநேர
வானத்தை நட்சத்திரங்கள்
அலங்கரிப்பது போல்
என் மனதை அவன் நினைவுகள்
அலங்கரித்துக்
கொண்டிருந்தன..!
தூக்கம் கண்களை
அரவணைக்கவில்லை துக்கம்
என் இதயத்தை அரவணைத்துக்
கொண்டது..!
கண்களை மூடினால்
அவன் நினைவலைகளே
கண்களில் நிழலாட
மூடிய விழிகள் திறந்து
கொண்டன..!
திறந்த விழிகள்
திறந்த படியே ஏதோ
ஒன்றை எதிர் பார்த்து
காத்துக் கொண்டிருந்தன..!
நிஜம் வலிக்கின்றது..!!
தத்தளிக்கும் ஓடம்
முட்களாய் நீ என்னைக்
குத்த மலராய் - உன்
நினைவுகள் என்னை
வருடிச் செல்கின்றன...!
காதல் என்னும் வானத்தில்
நிலவாய் ஜொலிக்கும் உன்னை
அடைய காற்றை நூலாக்கி
விரைகின்றேன் உன் கரம் பிடிக்க
மின்னலாய் வந்து அறுத்தெறிந்து
செல்கின்றாய் என்னை..!
மேகமாய் இருக்கும் என் சோகத்தை
காற்றாய் மாறி கலைப்பாயென நானிருக்க
இயற்கையில் இருக்கும் பசுமைபோல்
நிலைக்கச் செய்து விட்டாயே
சோகத்தை என்னுள்...!
உன் பிரிவை மறக்க கவிதை
என்னும் விதையை என்னுள்
விதைத்தேன் மரமாய் வளர்ந்தது
கவிதை மட்டுமல்ல உன்னால்
ஏற்பட்ட ரணங்களும் தான்...!
நினைவை மறக்க நிழலை
என்னுள் திணித்தேன் − நிழலே
உன் உருவமாய் நிழலாட
என் உயிர் ஓடமாய் தத்தளிக்கின்றது
நடுக்கடலிலே....!
Sunday, October 28, 2007
என்னுள் உன் ஆக்கிரமிப்பு
இரு தலைக்கொல்லி
முடிவில்லா வானம்
போல் முடியவில்லை
நான் போகும்
வாழ்க்கைப் பாதை..!
காற்றைச் சுவாசிக்க
வெறுக்கின்றேன் - உன்
மூச்சுக் காற்றையும்
தாங்கி
வருவதால்..!
கண்கள் காணும்
காட்சிகள் அனைத்திலும்
உன் விம்பம் காணுவதால்
கண் மூடிவாழ
முயற்சிக்கின்றேன்..!
இருளில் ஒளியாய் மூடிய
விழிகளுக்குள் கள்ளமாய்ச்
சிரிக்கும் உன் விம்பம் - என்
சிந்தையைக் கலைக்கின்றது..!
விழிகளை மூடவும்
முடியாமல் திறக்கவும்
முடியாமல் தவிக்கின்றேன்
ஒரு தலைக்கொல்லி
எறும்பாய்..
இரவு நேர நிலவு..!
வலிகளின் கதறல்கள்..!
Saturday, October 27, 2007
காதலின் கல்லறையிலே..!
தொலைத்து விட்டேன்
என் தொலை தூரப்
பார்வையை...!
உன்னிடம்
ஜ மிஸ் யூ
Friday, October 26, 2007
உன்னால்
இதயத்தின் விசும்பல்கள்
கண் பார்வையில்
இரத்தோட்டமாய்..!!
Thursday, October 25, 2007
உன் தீண்டலுக்காய்...
என் மனதின் எண்ணங்களை
நீ படிப்பதற்காய் வரைகின்றேன்
கவிதைகள் பல...
என் கவிதையின் பிரதிபலிப்பு
உன் கண்கள் தீண்டா என் கண்கள்
உன் இதயம் கண்ட என் இதயம்
என் உயிருக்குள் வசிக்க
மறுக்கின்றது...
உனக்காய் நான் படைத்திட்ட
காவியங்கள் காத்துக் கிடக்கின்றன
உன் தீண்டலுக்காய்..
ஓரு முறை நோக்கி உயிர்
கொடுத்துச் சென்று விடு என்
கவிதைப் பூக்களுக்கு....
Wednesday, October 24, 2007
உன் காதல்
கண்கள் உன்னைக்
கண்ட நொடி உலகமே
என் காலடியில் விழுந்து
கிடப்பதாய் எனக்குள்ளே
ஒரு பிரமிப்பு......
உன் இதயம் என்னும்
மாளிகையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும்
ராணி நான்
என் இதயம் என்னும்
மாளிக்கையை ஆக்கிரமித்து
குடி கொண்டிருக்கும் என்
தேவ தூதன் நீ.....
என் கண்களை - உன்
கண்கள் நோக்கும்
அந்த நொடிப் பொழுது
இந்தஓரு நொடிக்காகத்
தான்ஒரு யுகம்
காத்திருந்ததைப் போன்ற
ஒரு பிரமிப்பு - இனி
என் வாழ்வு உன்னுடனே
உன் வாழ்வு என்னுடனே
இதயங்களை பரிமாறிக் கொண்டோம்
சோகங்களை இதழ் மாற்றிக் கொண்டோம்
இன்பங்களை பரிமாறிக் கொண்டோம்
என் கனவுகள் உன் நினைவாகவே
உன்னோடு நான் வாழ்ந்த
காலம் என் நினைவு என்னும்
பெட்டகத்தில் உயிரினால்
பூட்டப்பட்டு காவல் காக்கப்படுகின்றது...
அன்பின் சுகம்
உன் பிரிவு
!! பிரிவின் வேதனை !!
தந்த வலியால்
!! பீனிக்ஸ் !!
உன்னால் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்..!
கடல் நீராய்
இருந்த என்னை
மழை நீராய்
மாற்றினாய்..!
நனவாய் இருந்த
என் ஆசைகளை
கனவாய்
நானாய் இருந்த
என்னை நீயாய்
சோக கீதமாய்
இனிய கீதமாய்
மாற்றினாய்..!
புயலாய் இருந்த
என் வாழ்வை
தென்றலாய்
விட்டாய்..!
புதையல்..!
என் முதல் கனவே..!!
அன்பே...தென்றலாய்
வந்து இதமாய்
கடந்து சென்றாய்...
புயலின் தாக்கத்தை
விட்டுச்
செல்கின்றாய்..!
வெளிச்சப் புள்ளியாய்
தோன்றி மெழுகாய்
ஒளி தந்து
கடந்தாய்...
ஒரு மின்னலின்
அதிர்வை பதிந்து
செல்கின்றாய்..!
ஒற்றை மலராகவே
வந்தாய் அழகிய
பூந்தோட்டமாய் நறுமணம்
கமழ்கின்றாய்
எப்படி என்னுள்
நுழைந்தாய்..!
நானே அறியாத
ஒரு கணத்தில்...
பகல் வானம் போல்
வெறுமையாய் இருந்த
என்னில் - இரவு
வான் நட்சத்திரங்களாய்
உன் நினைவை
விதைத்து விட்டாய்..!
உன் ஞாபக அலைகள்
சிறு தூறலாக
துளிர்த்து அருவியாய்
ஆர்ப்பரிக்கின்றது
யார் நீ...!
உன்னைச்
சொல்லாமலேயே
என்னைக்
கொல்கின்றாய்
என் முதல் கனவே..!
எப்பொழுது உன்னைக் காதலிக்கத் தொடங்கினேன்..!!
சோகத்தையும்
காதல் அத்தனை
உனது சிரிப்பை
விழித்துவிட கூடாதே
பிரசுரத்துக்கு அனுப்பாத
!! யார் வரவுக்காக !!
உறக்கம் கொள்ளத்
துடித்த சூரியக் கதிர்கள்
மறைந்து மழைத்துளிகள்
விரைகின்றன - நிலவின்
கறையைத் துடைக்க..!
நிலவின் மடியில்
இரவுதுயில் கொள்ள
கலைந்து வாழ்விழந்து
காத்திக் கிடக்கின்றது
யார் வரவுக்காகவோ..!
ஆயுள் ரேகை..!
!! காதல் தேசம் !!
உன் புன்னகை !
!! உயிரின் ஆசை !!
உன்னால்..!!
எல்லா நம்பிக்கைகளும்
உடைத்தெறியப்பட்டு
ஒவ்வொரு கணங்களும்
மிகவும் கனமான
ஏக்கத்துடன்
தொடர்கிறது
உன்னால்..!
உண்மையான சந்தோஷத்தை
தொலைத்து - போலியான
சந்தோஷத்தை
முகத்தில் சுமந்து
அலைகிறேன்
நாளும்
உன்னால்...!
சலனமில்லாத
இராத்திரியில் தூக்கத்தை
தொலைத்து - தினமும்
தலையணை
நனைக்கிறேன்
உன்னால்..!
அன்பும் அரவணைப்பும்
உறவுகளிடம்
செத்துப் போன - பின்பும்
வாழ்கிறேன் எதனால்
உன்னால்..!