Thursday, November 29, 2007
உன் அழகிய முகம்..!
கரைத்திட மாட்டாயோ..!
Wednesday, November 28, 2007
அக்னித் துளிகள்..!!
இனித்திடும் கனியல்ல
நினைக்க நினைக்க
கசந்திடும் காதல்
எனது..!
தித்திக்க தித்திக்க
இசைத்திடும்
அக்னித் துளிகள்
அவை..!
நினைவுகளின் நிழல்
எரிமலையென மாறிட
தீயில் விழுந்த மலராய்
கருகிறது என்
இதயமும் - நீ
Tuesday, November 27, 2007
சொந்தமில்லை..!
Sunday, November 25, 2007
தனிமை..!
இதற்கு பெயர் தான் காதலா..!
இரு மின்னல்களும்
ஒன்றையொன்று
அவன் கண்கள்
உரசும் போது
ஒளிக்கீற்று...!
இதயத் துடிப்பு
வேகமாக துடிக்கின்றதே..,
அவனின் அழகிய
சூரியனோடு வெண்ணிலா
காதல் கொண்டதோ....!
கண்கட்டி வித்தை காட்டி
என்னுள் நுழைந்து
கரம் கொண்டு தடுத்திட
முயற்சித்தேன்
விரல்களுக்கிடையில்
காற்றுக்கள் அனைத்தும்
இறைவனுக்கு பதில்
உன் முகம்..,
பாதத்தை
அடிவைத்து
தரையில் காணும்
உன் முகம்..,
உன் முகம்
கேட்கும் குரலனைத்தும்
உன் குரல்..,
உன் பெயரையே
உச்சரிக்கும்
Saturday, November 24, 2007
வலிக்குதடி..!
Friday, November 23, 2007
தியேட்டர் நினைவு
குடும்பத்துடன் படம்
பார்க்கச் சென்றேன்
அங்கே வரவேற்றது
உன் பழைய நினைவுகள்
என்னை......
நீ இல்லையே என்னருகில்
என்று மன அழுகையை
ஒரு புறம் தள்ளிவிட்டு
உள் சென்று நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்......
திரையில் படம்
ஓடிக் கொண்டிருந்தது
மற்றவர்கள் சிவாஜி
பார்த்துக் கொண்டிருந்தனர்
நான் மட்டும் நீயும் நானும்
அன்று கண்களால்
பகிர்ந்து கொண்ட அன்றைய
நிகழ்வைக் கண்களில்
கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தேன்..!
உ(எ)ன் காதல்
மொழி பெயர்ப்பாயா....?
இலக்கற்ற பயணம்...!
*** ஏது.. ஏது.. ஏது.. ***
!! மனதை வருடும் இன்னிசை !!
காற்றென பறக்கிறது
சிறகடித்துப் பறந்திடும்
மனதிற்கு கடிவாளமிட
வந்தவனே..!
வர்ணங்களோடு சேர்த்து
என் கனவுகளையும்
களவாடிச் சென்றதும்
கண்மூடினால் அணைத்திடும்
தூக்கத்தில் கூட
பாதை தெரியாத பூக்களாய்
வலிகளின் நிழலில்
என்னைத் துவாளமிட்டதும்
கனவினில் உன் முகம்
மின்னலென பளிச்சிட
தூங்கிய நினைவுகள்
உரசிய தீக்குச்சியாய்
விழிப்பதுமேனோ..!
ரோஜாக்களை ரசித்திட்ட
இதயம் இன்று
முற்களைக் கூட
ரசிக்கின்றனவே..!
கல்லுக்குள் ஈரமாய்
உன்மேல் இன்னும்
காதல் கசிகின்றதே
நினைவு வலிகளை
நீ பரிசளித்துச்
மனதை வருடும்
!! சுமை தாங்காது !!
Thursday, November 22, 2007
Wednesday, November 21, 2007
ஓடோடி வந்திடு..!
கண்கொண்டு பார்க்க மாட்டாயா..!
கரைந்தோடுகின்றது..!
!! கனவே கலையாதே.. !!
!! நிலவாய்... !!
** ஏனோ....!! **
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ...!
செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே
அலைகடல்கள் பின்னோக்கி
ஓடியதுமேனோ
முயல் குட்டிகள் துள்ளி
கண்களோடு சில்மிஷம்
செய்ததேனோ...!
உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக்காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம்
படபடத்ததுமேனோ..!
நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து
மெளன பாஷையில்
சஞ்சரிப்பதுமேனோ..!
என் விரலோடு உன் விரல்கள்
செல்லச் சண்டை பிடிக்கையில்
மேகங்கள் ஓன்றோடு ஒன்றுரசி
பன்னீர் தெளிப்பதுமேனோ..!
Tuesday, November 20, 2007
!! கற் சிற்பம் !!
அன்பை மருந்தாய்
மாற்றினேன் என்
உயிருக்கு - அதுவே
விஷமாய் என்னுயிரை
காற்றோடு காற்றாய்
மாற்றிச் சென்று விட்டதே..!
திசையறியாமல் உன்
மூச்சுக் காற்றை தேடி
தேடிப் பயணிக்கின்றது
துடுப்பிழந்த ஓடமாய்...!
வர்ணத்தில் கலந்திட்ட
நீராய் கலந்திட்டேன்
உன்னுள் நான்...!
இரும்பு கொண்டு
காந்தத்தை மணலில்
இருந்து பிரிப்பதைப்போல்
சுட்டெரிக்கும் உன்வார்த்தை
கொண்டென்னை
திரிந்து போக
கயிறல்லவே...!
கலைய கலைய
மணல் சிற்பமல்ல
என் காதல்
உடைந்திட்டால் மீண்டும்
செதுக்க முடியா கற்சிற்பம்
உன்னோடான என் காதல்...!
!! குறுங்கவிகள் !!
குறுங்கவிகள்.. !!
சிக்ரெட் எனும்
புல்லாங்குழலில்
மரணமெனும் கீதம்
இசைக்கலாம்...!
....~~~~.....~~~......~~~~.....~~~~......~~~~
மழையின் இன்னிசையில்
கரைக்கின்றது உயிரை
வெளிச்சமாய்
கரைத்துக்
உன் நினைவு...!
வர்ணங்களைத் தொலைத்த
இலைகள் என் காதலைப்
போலவே..!
வர்ணங்களோடு காட்சியளிக்கும்
இல்லையேல் இரத்தத் துளிகளா...
!! வாழ வேண்டும் !!
காதலெனும் அரியாணையில்
ஆட்சி செய்யும் ராஜா நீ
உன்னை ஆளும்
ராணி நான்...!
பூமித் தாயை அர்ச்சிகின்றன
பூக்கள் கொண்டு மரங்கள்
உன்னை நான் பூசிக்கின்றேன்
என் அன்பு கொண்டு..!
குழந்தை போல் தவழ்ந்து
செல்லும் தென்றல் இதமாய்
உன்னைத் தழுவிச்செல்ல
உன் கேசம் தவழ்ந்து
விளையாடுகின்றது உன்
நெற்றிப் பொட்டில்..!
நீ கடலைகளில் கால் நனைக்க
நான் நனைந்து கொண்டேன்
உன் அன்பு மழையில்...!
செல்லமாய் கோபம் கொல்லும்
உன் கண்கள் எதோ செய்தியை
எனக்கு சொல்லிச் செல்ல
அதனை என் விழிகள்
கவ்விக் கொள்கின்றன
இரையை கவ்வும் மீன் போல்...!
ஏழு ஜென்மங்கள்
வேண்டாம் எனக்கு
வாழ வேண்டும்
இந்தப் பிறப்பில்
உன்னுடன் ஏழேழு
ஜென்மத்துக்கும்
சேர்த்து...!
திசைகள் இன்றி..!
நினைவுகளை
வடிக்கின்றேன்
உன் முகம் மறந்து
காற்றில் பறக்கும் சருகாய்
உன் நினைவுகள்
பருந்தாய்....!
குயிலாய் பாடித்
களவாடிச் சென்று
உயிருள்ள சிலையின்
நீ திரும்பும் திசையெல்லாம்
திசைகளின்றி பயணிக்க
என் வாழ்க்கைப்
Monday, November 19, 2007
ஒரு தடவை..!
வாழ்க்கைப் பாடம்
ஆறடி மண்ணுக்குள் போவதற்கு
துடிக்கின்றாயே உன்னை
துடி துடிக்க விட்டுச்
சென்றவனை நினைத்து....
ஒரு கணம் நில் பெண்ணே
உன் வாழ்க்கை - காதல்
என்னும் சக்கரத்தை மட்டும்
சுற்றி அமைக்கப் படவில்லையே....
பரந்து விரிந்து கிடக்கும்
பூமியெங்கும் இயற்கை
விரிந்து காட்சியளிக்கின்றது
மத்தளம் போல்....
மரம் பூவையிழந்து கனியைத்
தருகின்றது....
வானம் முகிலை இழந்து
மழையத் தருகின்றது....
விறகு தன்னை எரித்து
எமக்கு ஒளி தருகின்றது...
கற்கள் பல அடிகள் தாங்கி
அழகிய சிற்பமாய்
உருவெடுக்கின்றது....
ஒன்றில் இருந்து இன்னொன்றாக
உருவெடுக்கின்றது இயற்கை...
நீ மட்டும் ஏன் இழந்ததை நினைத்து
உன்னை இழக்கின்றாய்..
வாங்கும் வலிகளையும்
அடிகள் அனைத்தையும்
வாழ்க்கையின் பாடமாய்
ஏற்று உன்னை நீ மேம்படுத்து
அனைத்தும் உன் நன்மைக்கே
என நினை தோல்விகள் கூட
வெற்றிக்கனியாய் தித்திக்கும்.....
காதல் பாதையில்..!
இடம் தந்திடு..!
!! முடிவிலி !!
கனவுக்குள் நிஜமாய்
வாழ்கின்றாய்
நிஜத்தில் நிழலாகிப்
போகின்றாய்..!
மலர்களின் வாசம் போல்
என்னுள் உன் அன்பை
நிலைநிறுத்தி விட்டு
கானலாய்ப்
போய்விட்டாய்..!
காகஎச்சங்கள் பல
இடங்களில் விதைகளை
விதைத்து செல்வதுபோல்
என்னுள் - உன்
நினைவுகளை
விதைத்துச்
சென்று விட்டாய்...!
முயன்று முயன்று
தோற்றுப் போகின்றேன்
உன்னை மறக்க முடிவிலியாய்
போய்க் கொண்டிருக்கின்றது
நினைவுகளோடு கூடிய
வலிகள்..!
உன் முகம்..!
அது ஏனடா....???
அழகான அந்த
நாட்களில் அன்பாகப்
பேசிய வார்த்தைகள்
அமுதாக இருந்ததே
எனக்கு இன்று
அதே வார்த்தைகள்
விஷமாகத் தெரிகிறதே
அது ஏனடா...!!
அன்று முற்களைக்
கூட பூவாய் மாற்றிய
உன் காதல்
இன்று பூவை முற்களாய்
மாற்றுகின்றதே
அது ஏனடா....!!
இதற்கெல்லாம்
காரணம் - நான்
உன்னைப்
பிரிந்ததாலா - இல்லை
இன்னொரு பெண்
உனக்கு
காதலியானதாலா....!
Sunday, November 18, 2007
!! ரசிகை நான் !!
எல்லாமே கனவாக..!
ரசிப்பதே - என்
யன்னல் வழியே
உன் தம்பியிடம்
அதிகம் கேட்பதே
உன்னை பற்றியே..!
உனை உன் தந்தை
தண்டிக்கும் போதெல்லாம்
உனக்கு வலித்ததோ
இல்லையோ எனக்கு
வலித்ததடா..!
உன் கூடவே உன்
கைபிடித்து நடக்க
ஆசை- ஆனால்
என் வாழ்க்கையில்
எல்லாமே கனவாக
போனதே..!!
!! காதல் தேசம் !!
என் குருதிக்குள் அணுவாய்
கலந்திருப்பவனே
உன் விழிகளை - நான்
ஆட்சி செய்வது
அறியாமல்..!
உன்னை நான்
தேடித் தேடி அலைகின்றேன்
சூரியனைத் தேடும்
தாமரையாய்..,
காதல் என்னும்
பூங்காவனத்திற்கு
அழைத்து வந்த
தேவதூதன் நீ
என்றும் ஜீவன்
எனக்கு நீ..!
காற்றில் தவழ்ந்து
கடலில் மிதந்து
காதல் என்னும்
தேசம் தேடி
போகின்றேன்
உடலாய் இருக்கும்
உன்னிடம் உயிராய்
வந்து கலந்திட...!
அன்னையின்
அன்பில் உலகை
மறந்திருந்த நான்
உன் அன்பில்
அன்னையையே மறந்து
காதல் என்னும் பூவில்
அன்பென்னும் தேன்
அருந்துகின்றேன்...!
வானத்தின் உச்சியில்
மிதக்கின்றேன் உன்னால்
என் காதல் உனக்கு
புரியாவிடில்
விழுந்திடுவேன்
சிறகொடிந்த
பறவையாய்..!
Saturday, November 17, 2007
!! திறந்து கொண்டது இதயம் !!
காத்திருக்கிறது காவியம்..!
கிணற்று நீர் போல்
கண்களில் கண்ணீர்
குடி கொண்டது..!
எதிர்பாராமல் கிடைத்த
உறவு கண்ணிமைக்கும்
நேரத்தில் காணாமல்
போய் விடுமோ என
இதயம் பட படக்க
கண்களில் கண்ணீர்
அருவியாய் கொட்டியது..!
மரங்களில் இருந்து உதிர
உதிர துளிர்க்கும்
இலை போன்று - நீ
விலக விலக உன்னில்
என் அன்பு மென்மேலும்
துளிர்க்கின்றது..!
என் இதயப் புத்தகத்தில்
உணர்வுகளை கவியாக்கி
உதிரத்தை மையாக்கி
நரம்புகளைப் பேனாவாக்கி
உனக்கென நான் வடித்த
காவியம் காத்திருக்கிறது
உன் பார்வைக்காய்..!
Friday, November 16, 2007
அன்புத் தோழி..!
நான் இல்லை என்னருகில்
நீ இல்லை..!
நோக்கும் என்றென்றும்...