Thursday, February 28, 2008
நீ
!! தெரியவில்லை.. !!
பூமாதேவியே
பொறாமைப்பட
நேற்று வந்த புயலில்
அடித்துச் செல்லப்பட்டு
அமைதியே வடிவான
இன்று அமைதியற்ற
ஆர்ப்பாரித்துக்
எதை மறைக்க
இந்த வேஷம் − உன்
மனதையா இல்லை
மனதை வருத்தும்
காரணம் சொல்
உன் இதயத்தை
அடித்து சென்று
மெளனம்
Tuesday, February 26, 2008
Friday, February 22, 2008
கடந்திடும் நிமிடங்கள்
Thursday, February 14, 2008
உயிரோடு கலந்து விட்டாய்..!!
என்னுயிரே
Wednesday, February 13, 2008
கவிதை கொண்டு
இன்னொரு ஜென்மம்
உன் பார்வையில்
எத்தனை ஆழமடி
உன் இரு விழி உரசலில்
ஊசலாடி போனதே
என் உயிர்...
என் உயிரோடு
உன் உயிர்
சில்மிஷம் செய்கையில்
வலிக்கின்றதடி என் இதயம்...
கனவென நினைத்து
உதறித் தள்ளிய காலங்கள்
நிஜமென வந்து செல்கையில்
காணாமல் போகின்றது
என் மென்மை...
என் கோபங்களை இடியென தாங்கி
என்னை சிற்பமென செதுக்குகின்றதே
உன் பொறுமை......
இசையில் கரைந்திடும் கானக் குயிலே
கண்கள் மூடி நடக்கின்றேன்
முட்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில்
உனதன்பை பூவென
என் வாழியெங்கும் தூவி....
உன் உயிரினில் - என்
வலிகளை தாங்கிடும் என்னுயிரே
என்ன செய்வேன் உனக்கு
நான் என் உயிரைத் தருவதைத்
தவிர...
இன்னொரு ஜென்மத்தில்
நம்பிக்கையில்லை எனக்கு
இன்னொரு பிறவி இருந்து விட்டால்
உனக்கே குழந்தையாகும் வரம்
கிடைத்திட வேண்டிடுவேன் இறைவனை...
பொய்களின் அஸ்திவாரத்தில்..!
பொய்களின் அஸ்திவாரத்தில்
புலம்பித் தவிக்கிறது காதல் குழந்தை...
கண்ணுக்குள் உன்னை குடியிருத்தி
பார்வையற்றவளாய் வாழ்ந்து
உன் பிரிவால் உண்டான
பார்வையின் வெளிச்சம்
என் உயிரை கூசச் செய்கின்றதே....
உன் நினைவுகளின்றி
கரைய மறுத்த இரவுகள்
உன் நினைவுகள் கலையாமல்
கரைய மறுக்கின்றது
சூரியனில்....
தாலாட்டென தாலாட்டிய
உன்னோடான கனவுகள்
இன்று என் தூக்கம் கலைத்து
துக்கத்தில் தள்ளுகின்றனவே
என் இனிமைகளை....!
உயிர் கரைந்தாலும் கரைந்திடாத
உன்மேலான என் காதலை அன்பே
என் உணர்வு கொன்று
கலைக்க முயற்சிக்கின்றாயே...!
உன் நிழலில் வாழ்ந்திட்ட உயிரிது
உன் நிழலின்றித் தவிக்கின்றது
அனலென உன் நினைவுகள்
என்னைத் தாக்கும் போது...!
Tuesday, February 12, 2008
ஜொலிக்கின்றேன்
மறைந்திடும் வானவில்லல்ல நீ
என் இன்பத்தில் மிளிர்ந்து
என் சோகத்தில் பொலிவிழந்திடும்
வெண்ணிலவு நீ.....
எனது தூக்கத்தில் வளர்ந்திட்ட
அழகிய கனவு நீ....
என் நடைபாதையில் துணைவரும்
தென்றல் காற்றும் நீ...
என் இதயத்தின் வழியே நுழைந்த
உன் நட்பு என் கண்களின் வழியே
கண்ணீரென பாய்கின்றதே
உன் மெளனம் தாங்காது....
உன் மேல் துளிர்த்திட்ட அன்பு
வானமென வளர்ந்திட
உன் கோபத்தில் தேய்ந்து போகின்றேன்
பெளர்ணமி நிலவென...
மழை நீரென என்னில் பொழிந்து
என் வாழ்வை பசுமையாக்கியவனே
பார்வையற்றுப் போகின்றேன்
உன்னைக் காணாத நாட்களில்....
காலைநேர பனித்துளி சூரியனின் ஓளிபட்டு
வைரமென ஜொலிப்பது போல்
உனதன்பு பட்டு நான் பிரகாசிக்கின்றேன்
இருளிலும் ஓளியென....
Monday, February 11, 2008
உன் மெளனம்
அளந்தளந்து அன்பு வைத்திட....
நிலவு தேய்ந்திட
வானம் அழுவதில்லையே - நீ
தேய்வதால் நான் அழுகின்றேன்......
தேய்ந்திட்ட நிலவு வளர்ந்திட
மலர்ந்திட்ட பூ வாடியதே
உன் சினம் கண்டு.....
மழை நீரென அன்பை நீ பொழிந்திட
சிலிர்த்துப் போகுதே எனதுயிர்....
கனிந்திட்ட பழமென இனித்திடும்
உன் புன்னகையின் தித்திப்பில் என்னிதயம்....
என் பூவாசல் தேடி வந்த தேவதையே
உன் அன்புக் கனிகளை
மரமென விதைத்திடு என் மனதினிலே
என் ஆயுள் முழுவதும் புசித்திடுவேன்...
என் தேகம் தீண்டிடும் தென்றல் காற்றே
என்னுயிரின் தேகம் தீண்டி வந்தாயா
என் ஆருயிரின் ஸ்பரிசம் உன் தீண்டலில்.....
பூக்களே பூக்களே - என்
கவிதையில் மலர்ந்திட்ட பூக்களே
என்னவள் கூந்தலில் அடைக்கலம் தேடுங்கள்
உயிர்த்திடுவீர்கள் என்னவள்
தொடுகையில்....
உன்னோடு நான் பேசியதை விட
உன் மெளனத்தோடு இரண்டறக் கலந்தது
அதிகமன்பே...
உன்னை விட - உன்
மெளனம் பிடிக்குமெனக்கு
என்னை அனுஅனுவாய்
சித்திரவதை செய்வதால்...
அதில் கூட சுகமுண்டு உயிரே
என் உயிரே நீயாகி போனதால்.....
என் கண்மணியே
உன்னைக் காண்கையில்
காணாமல் போய்விடும்
என் சோகங்கள்...
உன்னை காணாமல் தவித்திடும்
என்னிரு விழிகள்....
உயிரால் உன்னைத் தேடி
இதயத்தில் பாதுகாக்கின்றேன்...
பிரிவுகளின் நிழலில்
சோகத்தின் பிடியில்
தத்தளித்த என்னை
இசையென மாற்றி
இன்னிசை பாடிட வைத்திடும்
என் கண்மணியே
நீயின்றி விடிந்திடாது
என் இரவுகள்
நீயின்றி தூங்கிடாது
என் விழிகள்....
உன்னோடு நான் பேசிய வார்த்தைகள்
எனக்குள் என்னை உருமாற்றி
உனக்குள் என்னை
நிலைநிறுத்திடும் என்றென்றும்...
என்னை உனக்குள் தேடி
உன்னை எனக்குள்
கண்டு கொண்டேன்...