Monday, March 24, 2008

!! ** துடிக்கின்றேன் **!!


நீ சிரிக்கின்றாய்
நான் அழுகின்றேன்...

உன் வாழ்க்கைப் பாதை
வழியே திரும்புகின்றது
என் விழிப் பயணம்...

என்னை நீ அழைகின்றாய்
நான் வருகின்றேன்
உயிரை நீ பறிக்கின்றாய்
நான் துடிக்கின்றேன்...

Friday, March 21, 2008

!!** காதலின் பரிதவிப்பு **!!

இனியவள்
கண்களுக்குள் ஏன் நுழைந்தாய்
உயிரினில் ஏன் கலந்தாய்
இதயத்தை ஏன் தவிக்க வைத்தாய்...

என் கண்கள் வழி தோன்றிடும்
காட்சிகளால் தண்டனை அடைவது
இதயமல்லவா....

கண் மூடினால் இமை முட்டிடும்
உன் நினைவுகளில் உயிர்
சிக்கித் தவிக்கிறது - உடலோ
விம்மித் தவிக்கிறது....

!! ** காதல் ரோஜா **!!

இனியவள்

என் கனவுகளுக்கு
முடிவேயில்லை சுவாசமாய்
உன் நினைவுகளை
நான் சுவாசிப்பதால்..!

நிஜத்தினில் கண்ணீர்
வடித்திடும் என்
காதல் ரோஜா
நினைவினில் ராகம்
இசைக்கையில் துளிர்த்திடும்
என் வதன முகம்..!

கண்களுக்குள் ஆயிரமாயிரம்
கனவுகள் அதன் காட்சிப் பிம்பம்
உன் தேன் சிந்தும் முகம்..!

வண்டென உன் வாசனை
நான் முகர்ந்திடுவேன்
என்னுள் உன்னை கலந்திடுவேன்
நினைவாலே..!

Thursday, March 20, 2008

!! உன் நினைவுகள் !!


குளிக்கையில் நனைந்திடும்
உடலோடு நனைந்திடும்
மனம் உன் நினைவுகளில்...!

கனவாக நீ வந்தாலும்
கலையாமல் என்றும்
என்னோடு சுவாசித்திடும்
உன் நினைவுகள்...!

உறங்கினாலும் உறங்கிடாத
நினைவுகளில் நீந்திடும்
என் விழிகளில் தேங்கிடும்
கண்ணீர் உன் நினைவுகள்...!

!!** நினைவுகள் **!!

இனியவள்
விழித்திருக்கையில் தென்றலாய்
தழுவி உறங்குகையில்
கனவென மாறி
என்னை அணைத்திடும்
உன் நினைவுள்....!!

Monday, March 17, 2008

!!** நினைவாலே **!!

இனியவள்
கனவாக நீ
போனாலும் நினைவாலே
உன்னோடு என்றென்றும்
வாழ்ந்திடுவேன்

Sunday, March 16, 2008

!!** நீ **!!

வெட்ட வெளி வானம் பார்த்து
வெறுமையை வெறித்தவள்
வாழ்க்கையில்
வானவில்லென மாறி
மாற்றத்தை
ஏற்படுத்தியவள் நீ

Saturday, March 15, 2008

!!** தோழியே **!!

இனியவள்

தோழியே உன் தோழோடு
தோள் சாய்ந்து நிலவின் ஒளியில்
உன் செல்லச் சிரிப்போடு
இரண்டறக் கலந்திட
ஆசையடி

!!** என் கனவுகள் **!!

இனியவள்
வெட்ட வெளிவானத்தில்
நிலவோடு துணையாக
என் கனவுகள் - உன்
நினைவுகளோடு உலாவுகையில்
எட்டி நின்று பார்க்கின்றது
நட்சத்திரங்களோடு இமையோர
கண்ணீர்த் துளிகளும்......

Friday, March 14, 2008

!!** விடைதேடி **!!


விடியும் விடியலில்
ஓளி வீசுமா வாழ்வு
விடை காணமுடியா
கேள்விகளுடன் விழித்திருக்கிறது
விழிகள் விடைகள் தேடி.....

!!** இன்னோர் இதயம் **!!

இனியவள்
பாடல்கள் கேட்கையில்
மென்மையாய் இதயத்தை
வருடிடும் உன் மென்குரலில்
விக்கித்தான் போகின்றேன்
நான்...

உன்னை விட என்னையெனக்கு
பிடிக்கும் அன்பே - நீயாக
நானிருப்பதால்....

என் இதய அறைகளில்
நிரம்பி வழியும்
உன் நினைவுகளை
சேமித்து வைப்பதற்காய் இன்னோர்
இதயத்தை யாசிக்கின்றேன்
இறைவனிடம்....

!!** மெளனம் கலைக்காயோ **!!

இனியவள்
மதம் கொண்ட யானையென
எனதன்பை உன் மெளனம்
மிதித்துச் சிதைக்கின்றதே...

உன் மெளனத்தால் துடிதுடிக்கும்
என் உயிரின் வலியை கலைந்திட
உன் மெளனம் கலைப்பாயா...

உடலோடு ஊடலென்ன
சொல் உயிரே - நீ இன்றி
இங்கு ஓர் அணுவும்
அசையாதே அறியாயோ நீ...

!!** வலி **!!

இனியவள்
பேச யாருமில்லாத போது
நினைவுகளே துணையாகி
வலிகளைச் சுமக்கின்றேன்...

காதல்


இதயத்தில் நுழைந்து
துன்பத்தில் கலந்து
இன்பத்தைத் தந்து
இமைகளின் ஓரத்தினிலே
கண்ணீர்த் துளியென
துளிர் விட்டு - உயிரினில்
இதமாய் உறங்கி - என்
உறக்கத்தைக் கலைக்கின்றதே.....

!! கனவே..!!

இனியவள்


கனவுக்குள் கனவென
தோன்றிடும் - அவன்
நினைவுகளில் 
மலர்ந்திடும் - என் 
இன்பங்கள் அனைத்தும் 
விடியலில் கனவாகிப் 
போகின்றனவே..!

கண்களில் 
தவழ்ந்திடும் 
கனவுகளே.., 
நிஜங்களில் 
தவழ்ந்திட 
மாட்டாயா..!

ஆயுள் வரை 
வலி கொண்டு
உயிர் போக்கிடும் 
அவன் நினைவுகளை
கரைத்திட மாட்டாயா
கனவே..!

(((~_~))) என் கனவுகள் (((~_~)))

இனியவள்
என் ஆசைகளோடு
போட்டி போடும்
அன்னையில் ஆசைகளில்
நிராசையாய் போய்விடுமா
என் காதல் - காலத்தின்
கோலத்தில் கண்ணீர்க் கோடுகளில்
கரைந்திடுமா என் கனவுகள்....

Thursday, March 13, 2008

என் இதயம்

இனியவள்
உன் இதயத்தோடு - என்
இதயத்தைப் வைத்துப் பூட்டிவிடு
உன்னை விட்டுப் பிரிய நேர்ந்தால்
துடிப்பதை நிறுத்திவிடும் - என்
இதயம்

Wednesday, March 12, 2008

=== காதலுடன் ===


இருளினில் தனிமையை கரைத்து
தனிமையில் நினைவுகளைக் எரித்து
கண்ணீருக்குள் சங்கமிக்கின்றேன்
காதலுடன்...

!!! பிரிவால் கூட முடியாதம்மா !!!

இனியவள்

பிரியாமல் இருப்பதற்காய்
பிரிவை யாசிக்கின்றாய்
பிரிவால் கூட முடியாதம்மா
என்னிடம் இருந்து உன்னை
பிரிப்பதற்கு....

~~ பூ நான் ~~


உன் வதன முகத்தில்
தவழ்ந்திடும் புன்னகையில்
பூத்திருக்கும் பூ நான்....

வாடாமல் காத்திடுவாய்
உன் இன்பத்தை நீராய்
ஊற்றியென்னை...

~~~~~ பூவென ~~~~~~

இனியவள்
அந்தி மாலை வேளையில்
ஆர்ப்பாரிக்கும் அலைகளுக்கிடையில்
அலைபாய்ந்திடும் மனதினை
கடிவாளமிட்டிடும் உன் நினைவுகளில்
நனைந்து தான் போகின்றேன் பூவென

***** வெண்ணிலா *****

இனியவள்
ஆயிரமாயிரம் நட்சத்திரங்களுக்கிடையே
இருளை பகலென மாற்றிடும்
வெண்ணிலா தனிமையில் கரைவதை
கண்டுகொள்ள யாருமில்லை.....

### வானமென ###

இனியவள்
வானமென நினைத்து பூரித்தேன்
எட்டமுடியா உயரத்தில் - நீ
இருப்பதை அறியாமல்...

Monday, March 10, 2008

*** எட்டாக் கனி ***


எட்டாய்க் கனியாய்
போய்விட்ட பாசத்தை
எட்டி நின்று 
ரசிக்கின்றேன்
ருசிக்க முடியாமல்...!

!!! நினைவுகள் !!!


நினைக்கின்ற போது
வலித்திடும்
வலிக்கின்ற போது
இனித்திடும் நினைவுகள்....

!!! மழைத்துளி !!!


துளித்துளியென கொட்டிடும்
மழையினில் துளிர்த்திடும்
உன் ஞாபகச் சிதறல்களில்
துடித்துப் போகின்றேன் நான்...

Saturday, March 8, 2008

!!! ~~~ உறவாடிடும் ~~~!!!


உன் பிரிவில் உணர்ந்தேன்
வலியின் வலிமை....

உன் நினைவில் கண்டேன்
என்னுயிரின் தவிப்பை...

உன் நிழல்களைக்
கடந்து செல்கையில்
நனைந்து போகின்றது
என்னிரு விழிகள்.....

பாறையென இருந்தேன்
மணல்த்துளியாய் சிதறடித்தாய்....

உன்னில் நான் கண்ட அன்பு
என்னில் நீ கொண்ட பந்தம்
விழி மூடித் திறக்கும் வரை
எனக்குள் இசை மீட்டிடும்
மூடிய விழிகள் திறக்காவிடின்
கல்லறையில் என் ஆன்மாவோ
உறவாடிடும்....

!! உயிரோட்டமாய் !!



கரைந்தோடும் 
நிமிடங்கள்
அனைத்திலும் 
உயிரோட்டமாய்
நீ இருப்பதால்
கண்ணீரில் 
கரைகின்றது
வாழ்க்கை...!

๑۩۞۩๑ மணல் ஓவியம் ๑۩۞۩๑


கண்களில் தெரிந்திடும்
காதலை வார்த்தைகளில்
தேடித் தேடி அலைகின்றேன்
மணல் ஓவியமென கலைந்து
போகின்றேன்......

~~~ !! கண்ணீராய் !!~~~


இருளைப் போக்கிட
நிலவாய் தேய்கின்றேன்..

இன்பத்தைச் சூடிட
துன்பத்தை கண்ணீராய்
கரைகின்றேன்....

(¯`·.♥ ஓருயிராய் ♥.·´¯)


உயிரைத் திறந்து
உணர்வைக் கலந்து
உனக்குள் கலக்கின்றேன்
ஓர் உயிராய்

உனக்குள் கலந்த மெளனம்


உனக்குள் கலந்த
மெளனம் என்
புன்னகையில் நுழைந்து
கண்களின் வழியே
கண்ணீராய் வருகின்றது.....

Friday, March 7, 2008

~~ உன்னாலே ~~


மேகத்தோடு தென்றல் உலாவுகையில்
உருப்பெறும் ஓவியத்தை தென்றலே
அழிப்பது போல்
உன்னால் எனக்குள்
உருப்பெற்ற அன்பு
உன்னாலே அடித்துச் செல்லப்பட்டது
என் உயிரினில் இருந்து.....

இதயம்


மேகங்களோடு ஓடிப்பிடித்து
விளையாடிடும் வெண்மதியை
கண்சிமிட்டிப் பார்த்திடும்
நட்சத்திரங்கள் போல்
உன் உயிரோடு என் உயிர்
கண்ணாமூச்சியாடுவதை - எம்
இதயம் துடிதுடிப்போடு பார்த்து
ரசிக்கின்றது....

Monday, March 3, 2008

காயம்


நீ தந்து விட்டுச் சென்ற
நினைவுச் சின்னங்கள்
இதயத்தை கீறிச் சென்றிட
கண்கள் கண்ணீரை தூதனுப்ப
உயிர் வலியினில் துடிக்கின்றது...
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.