இதயம் திறந்து
உயிர் கலந்து
இன்பம் பகிர்ந்து
துன்பம் கலைந்திடும்
காதலா எமது
இல்லையே...
இதயம் உடைந்து
துன்பம் கொண்டு
இன்பம் கலைந்து
உயிர் துறந்ததே
எமது உறவு...
Sunday, May 4, 2008
!!** எமது உறவு **!!
!! ** விடைதெரியா கேள்விகள் **!!
மழைச்சாரலின் தூறலில்
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ.....
செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே இருகரம் கோர்த்து
நாம் நடக்கையில் அலை கடல்கள்
பின்னோக்கி ஓடியதுமேனோ....
வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல்குட்டிகள் துள்ளியோடுகையில்
உன் கண்களிரண்டும் என் கண்களோடு
சில்மிஷம் செய்ததேனோ...
உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக் காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம் படபடத்ததுமேனோ...
நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து மெளனபாஷையில்
சஞ்சரிப்பதும் ஏனோ....
என்னுள் விடைதெரியா
பல கேள்விகளுக்கு விடையளிப்பாயா
ஓரே ஓரு பதில் கூறி...
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ.....
செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே இருகரம் கோர்த்து
நாம் நடக்கையில் அலை கடல்கள்
பின்னோக்கி ஓடியதுமேனோ....
வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல்குட்டிகள் துள்ளியோடுகையில்
உன் கண்களிரண்டும் என் கண்களோடு
சில்மிஷம் செய்ததேனோ...
உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக் காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம் படபடத்ததுமேனோ...
நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து மெளனபாஷையில்
சஞ்சரிப்பதும் ஏனோ....
என்னுள் விடைதெரியா
பல கேள்விகளுக்கு விடையளிப்பாயா
ஓரே ஓரு பதில் கூறி...
Subscribe to:
Posts (Atom)
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள் நன்றி இனியவள்