பத்துமாதம் சுகமான
சுமையென தன்னுள்ளம்
அன்புவுள்ளம் பெருக்கெடுக்க
காத்திருந்தாள் அன்னையிவள்
பிஞ்சுள்ளம் முகம்காண..!
விதி வேறு கூற
அவள் விதி இதுவென
கூற அலரிவிட்டாள்
தாயிவள் - நான்
கண்ட கனவனைத்தும்
இவனைப் என்னுள்
செதுக்கி பிஞ்சுவிரல்
நான் பிடிக்க பஞ்சுப்
பாதம் இவ்வுலகை மிதிக்க
என்னிரு கண்களும்
பரவசம் கொள்ளும்
ஆனந்த நிலையே..
நானின்றி போனாலும்
இவன் பிறக்கும் வரம் ஓன்றே
எனக்கு வேண்டும் - இறைவாவென
தாயுள்ளம் வேண்ட
கர்ப்பக் குழந்தை
பிஞ்சுக் கரம் கொண்டு
கெஞ்சிக் கோட்டது
கடவுளிடம்
என்னைப் பெற
என்னைப் பெற்றவள்
இயற்கையெய்வதை விட
பத்து மாதம் இவள்
கருவில் தவமிருந்த
மகிழ்வோடு இவ்வுலகை
தீண்டாது நான் உன் மடி
சேர்கிறேன் இறைவா..!
கண் திறந்தார் தாயுமானவர்
தாயும் சேயும் நலமென
மென்னகை புரிந்தார்
வைத்தியர்..
ஆனந்தம் பொங்கிடும் பரவசம்
அன்னையவள் முகத்தினில்
பொளர்ணமி நிலவொன்று
பச்சிளம் குழந்தையில்...
போராட்டம் இனிதே
நிறைவுற - கொண்டாட்டம்
ஆரம்பமாகியது இவர்கள்
வாழ்க்கையில்...!