Wednesday, April 20, 2022

ஏன் இந்த சாபம்..!!



நீ என்னை விட்டு 

தூரமாக இருப்பதனால்

உன் மீதான காதல்

முடிந்து விடும் என 

நினைத்தேன்..!


அழுது கொண்டே

இருப்பதனால் 

என் கண்ணீர் 

முடிந்து விடும் என

நினைத்தேன்..!


உன்னை நினைத்துக்

கொண்டிருப்பதால்

உன் ஜாபகங்கள்

முடிந்து விடும் என

நினைத்தேன்..!


உன்னை பற்றி 

எழுதிக் கொண்டிருப்பதால்

என் கவிதைகள்

முடிந்து விடும் என

நினைத்தேன்..!


எதுவுமே முடிந்தது போல்

தெரியவில்லை - எல்லாமே

அதிகமானது போன்றே 

இருக்கின்றது..!


எனக்கு மட்டும் ஏன் 

இந்த சாபம் - நான்

என்னையே கொல்லும்

இந்த என் ஜென்மம்

என் மரணத்தில் 

என் கவிதைகளுடன்

முற்றுப் பெறும்..!

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.