மறுபிறவியே
வேண்டாம் என
இருந்த நான்
உன்னுடன் முழு
ஆயுளும்
வாழ்வதற்காகவே
மீண்டும் ஒரு
பிறவி கிடைக்காதா
என ஒரு ஏக்கம்
இப்பொழுது...!!
முடிந்தவரை
பிரியத்தை
மட்டுமே சேமித்து
வைக்கின்றேன்
உன்னை
ஆயுள்வரை
பிரியாமல்
இருப்பதற்காக...!!
மறுபிறவியே
வேண்டாம் என
இருந்த நான்
உன்னுடன் முழு
ஆயுளும்
வாழ்வதற்காகவே
மீண்டும் ஒரு
பிறவி கிடைக்காதா
என ஒரு ஏக்கம்
இப்பொழுது...!!
முடிந்தவரை
பிரியத்தை
மட்டுமே சேமித்து
வைக்கின்றேன்
உன்னை
ஆயுள்வரை
பிரியாமல்
இருப்பதற்காக...!!
அடிக்கடி அடி
நொடி நொடி
அணை - கைகளை
இறுகப்பற்றி
காதல் சேர்..!!
தோளில் சாய்
தூரம் போகையில்
துணையாய் அழை
எங்கிருந்தாலும்
எஸெமெஸ் போடு
சிரிப்பை மட்டும்
இதழில் சுமந்து கொள்...!!
இதயம் கனக்க
எனையும் ஏந்திச் செல்
ஸ்பரிசங்கள் காட்டு
உரிமைகள் கூட்டு
சில நேரம் சோர்வேன்
தலை கோதி
தூங்க வை...!!
ஒரு உண்மையான
காதலை நீ
எவ்வளவு தான்
காயப்படுத்தினாலும்
அது மறுபடியும்
உன்னை இன்னும்
அதிகமாக நேசிக்குமே தவிர
உன்னை விட்டு
விலகி செல்லாது...!!
உன்னிடம் எதையும்
எதிர்பார்க்காத
நேரத்தில் - உன்
அன்பை வெளிப்படுத்தினாய்
இன்று உன்
அன்பை மட்டும்
எதிர்பார்க்கின்றேன் நீயோ
வெறுப்பை மட்டும்
பொழிந்து செல்கிறாய்..!
என் நண்பியிடம்
நீ கூறிய
வார்த்தைகள் என்
காதலை நீ காலடியில்
சிதைப்பதாக
இருந்தாலும் அதனால்
நீ சந்தோசம்
அடைகின்றாய் என்றால்
அப்படியே இரு
உன் சந்தோசத்தில்
வாழ்ந்து விட்டு
போகின்றேன் - என்
ஆயுள் உள்ளவரை..!!
பிறப்பின் தருணம்
உணர்ச்சி பூர்வமானது
அது ஒவ்வொரு
வருடமும் வந்து
செல்லும் போது
மிகவும் அழகாகிறது…!
ஒரு முறை
குறிஞ்சி மலர் பூக்க
பன்னிரண்டு வருடம்
ஆகுமென்றால்
அது பொய்தானே..,
வருடம் ஒரு முறை
குறிஞ்சி மலராய்
உன் பிறந்த நாளில்
நீ பூக்கிறாயே...!
உன்னுடைய இந்த
மகத்தான நாளிலே
நீ பூமிக்கு வந்துதித்த
இந்நாளிலே-என்
இனிய வாழ்த்துக்களை
என் வரிகளில் பரிமாறுகிறேன்..!!
இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்…🎂🌹
பெரிதான ஆசை
எனக்கில்லை..,
இறுதிவரை
என்னுடன்
பேசுவாய் என
கூறிய சத்தியம் கூட
பொய்யாகியதே...!!
அன்று உன்னுடன்
தூங்காமல்
பேசியதால் என்னவோ
இன்று நிம்மதியாக
தூங்க முடியாமல்
தவிக்கின்றேன்...!!
ஒவ்வொரு முறையும்
உன்மீது வைத்துள்ள
அன்பை வெளிப்படுத்த
நினைப்பது உண்மையில்
தற்கொலையை விட
கொடுமையானது...!!
அன்புடன் தான்
என்னுடன் பேசி
பழகினாய் என
இத்தனை நாளாக
சந்தோசமாக
இருந்தேன் - ஆனால்
கடமைக்காகவே
என இன்று
தெரியப்படுத்தினாய்...!
என் அன்பு உனக்கு
புரியவில்லை என்றாலும்
பரவாயில்லை - நீ
உனக்கு பிடித்தவர்களுடன்
சந்தோசமாக இரு...,
உன் சந்தோசம்
ஒன்றே போதும் - என்
ஆயுள் எல்லை வரை...!!
அன்று என்னோடு
நீ இல்லை - என்
காதலும் நீ
அறியவில்லை..,
இன்று அறிந்தும்
அறியாதவன் போல்
உன்னால் இலகுவாக
தூக்கியெறிய
முடிகின்றதல்லவா..!!
உன்னுடன் பேசாமல்
இருக்கின்றேனே
தவிர - உனை
நினைக்காமல்
ஒருபோதும்
இருந்ததில்லை...!!
நீ பேசும் நொடிவரை
காத்திருப்பேன் - அதே
அன்புடன்..!!
உனை உண்மையாக
நேசித்தது நான்
செய்த தவறா..
பேசாமல் இருக்க
உன்னால் முடியும்
என்றால் - நீ
தேடி வந்து
பேசும்வரை
என்னால் இருக்க
முடியும் என
நினைக்கின்றாயா...!!
விரல் கோர்த்திடும்
காதல் தேவையில்லை
தூரமாய் நீ
இருந்தாலும்..,
உள்ளமுருகி
உள்ளத்தால்
எல்லா நாளும்
உனை நினைக்கும்
காதல் போதும்...!!
இலகுவாக
எனை நீ
மறந்து விட்டாய்..,
ஆனாலும் மனம்
ஏங்குகின்றது
என்னிடம்
சொல்லிவிட்டு
சென்றிருக்கலாமே
என்று...!!
உன் மீதான
காதலினால் எதை வேண்டுமானாலும்
விட்டுக் கொடுப்பேன்
ஆனால்....,
உனக்கொரு
பிரச்சினையாக
நான் எப்போதும்
இருக்க மாட்டேன்..!!
வார்த்தைகளால்
சொல்லாத காதல்
சொன்னதும்
முறிந்ததும் ஏனோ...!!
என் ஒவ்வொரு
வரிகளிலும்
வாழ்ந்துவிட்டு
போகட்டும் - உயிரோட்டமாய்
என் காதல்...!!
நீ என்னை விட்டு
தூரமாக இருப்பதனால்
உன் மீதான காதல்
முடிந்து விடும் என
நினைத்தேன்..!
அழுது கொண்டே
இருப்பதனால்
என் கண்ணீர்
முடிந்து விடும் என
நினைத்தேன்..!
உன்னை நினைத்துக்
கொண்டிருப்பதால்
உன் ஜாபகங்கள்
முடிந்து விடும் என
நினைத்தேன்..!
உன்னை பற்றி
எழுதிக் கொண்டிருப்பதால்
என் கவிதைகள்
முடிந்து விடும் என
நினைத்தேன்..!
எதுவுமே முடிந்தது போல்
தெரியவில்லை - எல்லாமே
அதிகமானது போன்றே
இருக்கின்றது..!
எனக்கு மட்டும் ஏன்
இந்த சாபம் - நான்
என்னையே கொல்லும்
இந்த என் ஜென்மம்
என் மரணத்தில்
என் கவிதைகளுடன்
முற்றுப் பெறும்..!
என் எண்ணமெல்லாம் உன்னை
உயர்ந்த இடத்தில் வைத்து
பார்த்தேனே தவிர - என் மீதுவார்த்தையின் அர்த்தத்தை
புரிந்து கொள்ள முடியாத
இடத்தில் - கண்ணீரின்
வலி மட்டும் புரிந்து
விடவா போகின்றது..!
கண்களால் பார்க்க முடியாத
கைகளால் தொட முடியாத
தூரத்திற்கு எனை விட்டு
சென்றாலும் கூட..,
எப்பொழுதும் என்
மனதிற்கு நெருக்கமாகவே
நீ இருப்பாய்..!!
"I know i miss him because every time i think of him, my heart hurts.."
இப்படி நானில்லை
சிறு வயது முதலே
வீட்டு சூழ்நிலையோ
இல்லையென்றால்
சகோதரி கூட
பிறக்காததால் என்னவோ
மனதில் இருப்பதை
வெளியில் சொல்ல
முடியாமல் அப்படியே
மனதில் பூட்டி
வைத்திருப்பேன்..!
அதை யாரிடமாவது
சொன்னால் கூட
மனதில் கொஞ்சம்
பாரம் குறையும் - எனினும்
அதை எல்லோரிடமும்
சொல்ல முடியாது - ஆனால்
உன்னிடம் எப்போது
பேச ஆரம்பித்தேனோ
அப்போதே என் வாழ்க்கையில்
நடந்த அனைத்தையும்
உன்னிடம் போட்டுடைத்தேன்
காரணம் - என்
நம்பிக்கை நீ..,
ஏனைன்றால் அன்று
தொடக்கம் இன்று வரை
என் மனதில்
முழு இடத்தையும்
பிடித்தவன் நீ
என்பதால்..!
I lost My heart to Someone..,
Who doesn’t care..,
And Found it Crying in the Corner..!
எத்தனை முறை
சண்டை போட்டாலும்..,
உனை விட்டு
விலகி போக நான்
யோசித்ததே இல்லை - ஆனால்
நீயே என்னை போ என்று
சொல்லும்போது
அறியாமலே கண்ணீர் துளியில்
நனைகின்றேன் என்றும்
ஒருதலை காதலுடன்..!
காதல் செய்து
காமம் உணர்ந்து
காயம் தந்து
காலம் கடந்து
இறுதியில்- முதல்
இடத்திலே நிற்கிறேன்
கனவில்..!
"Sometimes it’s better to be silent and smile..!"
தண்ணீரில் கலந்த
இனிப்பு போல
உன்னுடன் நான்
கலந்தேன்..,
தண்ணீரில் இனிப்பை
பிரிக்க முடியாது
அதுபோல் இனிப்பு
கலந்தால் தண்ணீரின்
நிறம் மாறாது - அதுபோல
உன்னுடன் நான்
இணைந்தாலும் - என்
மனதில் என்றுமே
களங்கம் ஏற்படாது
என்றும் என் காதல்
தூய்மையானதாகவே
வாழும் - அதுவே
என் என்றென்றுமான
ஆசையும் கூட..!
நீயாகவே விலகினாய்
உனக்கென்னவோ
வலி இல்லை - ஆனாலும்
எனக்கும் அப்படித் தான்
இருக்கும் என்று
நினைத்தாயே - இதுதான்
ஒரு பக்க காதலின்
காயமா..!
"My Love Only Comes Like A Dream and Leaved Like A Nightmare.. "