Sunday, February 13, 2022

நிரூபித்து விட்டாயே...!



என் எண்ணமெல்லாம் உன்னை

உயர்ந்த இடத்தில் வைத்து

பார்த்தேனே தவிர - என் மீது 

உனக்கு துளி அளவும் 

காதல் இல்லை என்பதை 

ஒரே நொடியில்

உணர்த்தி விட்டாயே...!


மனதில் காதலுடன் உனை 

ஒருபோதும் ஆசை வார்த்தையுடன்

செல்லம் - குட்டி என்று 

அழைத்தது கூட இல்லை

உனை பெயர் கூறி

அழைத்தது கூட தவறென்று கூறி

உன் மனதில் சிறு ஓரத்தில் கூட

நானில்லை என்பதை 

நிரூபித்து விட்டாயே...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.