Monday, December 20, 2021

மனசுக்கு தெரியவில்லையே..!




சில நிமிடம்
பேசிவிட்டு..,
பல நிமிடம்
உன்னையே
நினைக்க வைப்பது
நீ தானடா...!

உன்னை ஒரு நொடியேனும்
நினைக்க கூடாதென்று
வேறு எதிலாவது
சிந்தனையை
கொண்டு போனாலும்
உன் நினைவே
அதிலொன்றாகி
விடுகின்றது..!

இன்று உன் நினைவில்
நான் இல்லை - அது
என் புத்திக்கு
தெரிந்தாலும் மனசுக்கு
தெரியவில்லையே..!

மனசு உடையும்போது
இதயம் சிந்தும்
இரத்தத்தின்
பிரதிபலிப்பே
கண்கள் சிந்தும்
கண்ணீர்..!!

"My love was a dream.., then came true and now it is over in a dream....!"

Wednesday, December 15, 2021

தூய்மையான காதல் பரிசு..!


எனக்கு வலி

என்பதை யாருமே

கொடுக்கவில்லை - நானே

என் இதயத்தை 

காயப்படுத்தினேன்..!


எனை யாரும்

வெறுக்கவில்லை

நான் தான் அவனை

விரும்பினேன்

எனவே எல்லா

வலிகளையும் நானே

ஏற்றுக் கொள்கின்றேன்..!


காதலிப்பவர்கள்

எல்லோரும் சேர்ந்து

வாழ்வதில்லை

சேர்ந்து வாழ 

முடியாதென்று

தெரிந்தும் காதலிக்கும்

இவளை பைத்தியம்

என்று சொல்லாமல்

வேறு எப்படி

சொல்வார்கள்..!


உண்மையில்லாத

காதலின் பிரிவு

ஒருபோதும் வலியை

கொடுக்காது - ஆனால்

சில தூய்மையான

உண்மையான காதல்

என்றுமே கண்ணீருடனே

பயணிக்கின்றது..!

நன்று..!


வாழ்க்கை எனக்கு

கற்றுக் கொடுத்த பாடம் 

யாருக்காவது பாரமாக

இருந்தேயேயானால்

அவர்களை விட்டு

தூரமாக போய்விடுவதே

நன்று..! 


கூடவே இருந்து 

அவர்களுக்கு

தொல்லையாக

இருப்பதை விட

விலகி விடுதல்

நன்று..!


மனக்கஷ்டங்களுடன்

உன்னை விட்டு பிரிய

எனக்கு விருப்பமுமில்லை

பிடிக்கவுமில்லை - நீயே

உன்னை விட்டு விலக

சொல்லமுன் நானே

விலகிவிடுதல்

நன்று..!

Sunday, December 12, 2021

கருவென சுமக்கிறேன்..!


நான் கனவிலும் 

நினைக்காத ஒன்று

எனதாக நினைத்த

நீ கனவாகி

போனதே..!


கனவாகிப் போன 

நீ என்னருகில் 

இல்லையென்றாலும்

உன் நினைவுகளை

அணைத்திடுவேன்..!


கருவென சுமக்கிறேன்

காதலை நெஞ்சினில்

கானல் நீரைப்போல்

தூரத்தில் இருக்கும்

உன்னை..!


உயிருடன் கலந்த

உன்னை அந்தளவுக்கு

காதலித்து விட்டேன்

வாழ்க்கையில் 

இன்னொரு காதல்

வரப்போவதும் இல்லை

வரத் தேவையும் இல்லை..!

Friday, December 10, 2021

அனுமதி அளிப்பாயா..!


விரும்பியவரை 

இதயத்திலிருந்து

தூக்கியெறிவதென்பது

பறவையின் 

இறக்கையினை

உடைத்து அதை

பறக்கச் சொல்வது

போன்றதே..!


உனக்கு என்னை

பிடித்தாலும்

பிடிக்கவில்லை 

என்றாலும் - உன்

சோகங்களை

ஆற்றும் மருந்தாக

இருக்க என்றாலும் 

எனக்கு அனுமதி

அளிப்பாயா..!

Thursday, December 9, 2021

இதயத்தில் குடியேறிய உன் நினைவு..!


வாழ்க்கை முழுவதும்

பெரிய ஆசை என்று

ஒன்றும் இல்லை - ஆனால்

பெரிதாக ஒன்றை 

மட்டும் நேசித்தேன்

அதுவே காதல் என்ற

அர்த்தத்தை புரிய

வைத்த முதல்

காதல்..!


மெய்யாக நேசித்த

உன்னை பொய்யாக

விலக நினைத்தேன்

ஆனால் இன்னும் 

அதிகமாக உன்மேல்

நேசம் வைத்து விட்டேன்

என் இதயத்தில் 

குடியேறிய உன்

நினைவுகளால்..!


உன்னை உண்மையாக

நேசித்தேன் - அதை 

இனியும் உன்னிடம் 

எப்படி புரிய வைப்பது..,

என் காயங்கள்

எல்லாம் என்னுடனே

போகட்டும் - இனியும்

புரியவைக்க 

விருப்பமுமில்லை

உன்னை தொல்லை

கொடுக்கும் எண்ணமும்

எனக்கில்லை..!


புதுப் பெயர்..!


இத்தனை வருட

என் காதலுக்கு

நீ கொடுத்த 

புதுப் பெயர்

முள்ளாய் நெஞ்சில்

குத்தினாலும் - உன்

மனதில் என்ன

உள்ளதென்பதை

தெளிவாக கூறினாயே

போதுமெனக்கு..!


என் காதல் உனக்கு 

குப்பைத் தொட்டி

போன்று உள்ளதென்றால்

பரவாயில்லை - உன்மேல் 

காதல் கொள்ள 

பூந்தொட்டியொன்று

உள்ளது என்பதால் - நான் 

நீ கொடுத்த புதுப் பெயரை

ஏற்றுக் கொள்கின்றேன்..! 

பேரன்பு..!!


கனவுகள் தந்தாய்

உன்னால் கனவினில்

வாழவும் பழகினேன் - ஆனால்

தேடி வந்து கனவை

நிஜமாக்கி இன்று

மீண்டும் கனவையே

தந்து விட்டாய்..!


காதலில் தோற்றவர்கள் 

எல்லோருமே காதலை

மறந்து வாழவில்லை

மனதுக்குள் மறைத்து

வாழ்கிறார்கள்..!


என்னுள் விதைத்த

உன்மீதான காதலுக்கு

என் கண்ணீர் தான்

தண்ணீர் - ஆனாலும்

உன்மேல் கொண்ட

பேரன்பால் தண்ணீர்

கூட பன்னீரே..!

Tuesday, December 7, 2021

நானும் அதிர்ஸ்டசாலிதான்..!


பாசத்தை பலவீனமாக

எடை போடாதீர்கள்

உண்மையாக ஒருவரை

நேசித்தால் - எங்கு

இருந்தாலும் அவருடைய

சந்தோசத்தை

பார்த்து நிம்மதியுடன்

வாழும் ஒரே ஜீவன் 

வைக்கும் உண்மையான 

பாசம் என்றுமே

பொய்யாகாது..!


எந்தவொரு எதிர்பார்ப்பும்

இல்லாமல் ஒருவர் மேல்

வைக்கும் அதீத

பாசம் எல்லோருக்குமே

கிடைக்காது..!


எதிர்பார்ப்பே இல்லாமல்

ஒருவரை உயிராக 

நேசிப்பதென்பதும்

வாழ்க்கையில் கிடைக்கும்

பொக்கிஷங்களே

அந்தவகையில்

நானும் ஒரு 

அதிர்ஸ்டசாலிதான்..!

காதலின் ஆழம்..!


உனை இவ்வளவுதான்

பிடிக்குமென்று

அளந்து கூற

தெரியாது - என்

காதலின் ஆழத்தை 

உனக்கு புரிய

வைக்க என் 

உயிரைத்தான்

இழக்க வேண்டினாலும்

உனக்காக அதையும்

செய்வேன்..!


வலியை புரிந்துகொள்ள

முடியவில்லையெனில்

என் வலி கூட உனக்கு 

ஒருபோதும் புரியாது

புரியும்போது - என் 

உயிர் இவ்வுலகில்

இருப்பது கூட

நிச்சயமற்றது..!

Sunday, December 5, 2021

!! இப்பூமியில் வாழ..!!


நான் சந்தோசமாக

இல்லை - என்றாலும்

சிரித்து கொண்டே

இருப்பேன் 

மற்றவர்களுக்காக..,

அந்த சிரிப்பில் 

யாருக்கும் சந்தேகம்

வந்ததில்லை..!


உறவென்ற ஒன்று

உண்மையில்லாத போது

எத்தனை அர்த்தங்கள்

இருந்தென்ன - இன்னும்

இப்பூமியில் வாழ

வேண்டும் என்ற

ஆசை எண்ணம்

ஒரு துளி கூட

இல்லை - எல்லாமே

எனை விட்டு

எப்போவோ

போய்விட்டது..!


ஆனால் என்னை 

அவமதித்தவர்களுக்காகவும்

அழ வைத்தவர்களுக்காகவும்

நான் அழிய வேண்டும்

என நினைத்தவர்களுக்காகவும்

இப்போதைக்கு எங்கும்

போக தயாராக இல்லை..!

!! ஆறாத ரணம்..!!


விரும்பியவர்களிடம்

எம் விருப்பத்தை கூறாமல்

இருந்ததற்கு காரணமே

அவர்களிடம் இருந்து

தவறான பதில்

கிடைத்து விடுமோ என்றே

மௌனமாக விலகி

நிற்கின்றோம்..!


அந்த விலகலுக்கான

வலி சிறிது காலத்தில்

மறைந்தால்

பரவாயில்லை - ஆனால்

ஆயுளுக்கும் மனதில் 

குடிகொண்டு ஆறாத

ரணமாய் ஆகிவிடுகிறது..!

Saturday, December 4, 2021

வெறும் காவியுடையா..!!


நினைத்தவுடன் 

மறப்பதற்கும்

மறந்தவுடன் 

நினைப்பதற்கும்

என் காதல் என்ன 

வெறும் காவியுடையென

நினைத்தாயா - என்

உயிரில் செதுக்கி 

இரத்தத்தில் கலந்த 

உறவு நீ..!


என் காதல் 

உனக்கு வேடமாக 

தெரிந்தால் - என்

நாடகம் முடியும் வரை 

நீயே அதில் என் நாயகன்

என் அன்பு உனக்கு 

தொல்லை தரலாம் - ஆனால்

என்றும் துயரம்

கொடுக்காது..!


என் காதல் உண்மை

என் நேசம் உண்மை

என் வார்த்தைகள் உண்மை

என் மனம் உண்மை

என் கனவு உண்மை

நீயே என் முதல் 

காதல் - அதுவே 

என் முடிவில்லா

காதலும்..!

வாடகை வீடு அல்லவே..!!


உனை அதிகமாக

நேசித்தேன் - நேசிப்பேன்

நீ எனை எவ்வளவு 

காயப்படுத்தினாலும்

என் நேசம் எப்பொழுதும் 

மாறாது..!


உன்னிடம் நான் நேற்று

பொய் உரைத்தேன் என

நீ எனை தவறாக

நினைத்தால் - நான்

என்ன செய்வேன்..!


இதயம் ஒரு 

வாடகை வீடு

அல்லவே - அது

நினைவுகள் புதைக்கப்பட்ட

கல்லறை - உன் 

நினைவுகளை என்றுமே 

அழியாத பொக்கிஷங்களாக

என் மனதில் சிறை 

வைத்துள்ளேன் - அதற்கு 

உன் அனுமதி 

தேவையில்லை - உன் 

நினைவுகளை யாராலும் 

என் மனதில் இருந்து

திருட முடியாது..!

நீயே கொடுப்பாயானால்..!


காலம் கடந்து 

காதலை சொல்வதால்

மிஞ்சுவது என்னவோ

வலி ஒன்றே - அதை

நீயே கொடுப்பாயானால்

நான் என்ன செய்வேன்..!


நீ ஆரம்பத்தில்

என்னிடம் பேசியதற்கும்

இப்பொழுது என்னிடம்

பேசும்போதும் உள்ள

வித்தியாசம் எனக்கு 

புரியும் - உன் 

மனதில் என்ன உள்ளதென்று

எனக்கு தெரியாது - ஆனால்

எனை விட்டு விலக

நினைக்கின்றாய் என்று

மட்டும் அறிவேன்..!


நான் நன்கு அறிவேன்

எனை உனக்கு

பிடிக்கவில்லையென்று

அதற்கான காரணம்

கேட்டு கூட இனிமேல்

உனை தொல்லை

செய்வதாக இல்லை

இனியும் உனை 

கஸ்ரப்படுத்த எனக்கு

விருப்பமும் இல்லை..!


உனை நான் எப்பொழுதும்

கஸ்ரப்படுத்த மாட்டேன்

நானே உனை விட்டு

போய் விடுகின்றேன்

என்னால் தான் உனக்கு 

கஸ்ரம் என்றால் - அந்த

வலியை கூட உனக்கு

கொடுக்க மாட்டேன்..! 

உன் நினைவுகள் போதுமே..!!


ஆரம்பத்தில் இருப்பது போல்

கடைசி வரை எவருமே

எம்முடன் வருவதில்லை

இது தான் உண்மை - இதை

உணராமல் அளவுக்கதிகமாக

நேசத்தை வைத்து

இறுதியில் மிஞ்சுவது

வலி ஒன்றே..!


வலியில் இருந்தாலும் 

என் மனதில் - உன் 

நினைவுகள் என்றுமே

சுகமானது - உன்னிடம்

பொய்யுரைக்க

எனக்கு ஒன்றும்

அவசியமில்லை - ஆனால்

நீ எனை இவ்வளவு தான்

புரிந்து வைத்துள்ளாய் என

நினைக்கையில் மனதில்

வலி ஒன்றை தவிர

வேறெதுவும் இல்லை..!

Friday, December 3, 2021

காதலின் பிரிவு..!


உனைத் தவிர

யாரையும் பின்

தொடரவில்லை

தூரமாக நீ நின்றால்

மட்டுமே உனை இமை

மூடாமல் பார்த்து

ரசிப்பேன் - ஆனால்

அருகில் நீ நின்றால்

நான் இருக்கும்

இடம் தெரியாமல்

மறைந்து விடுவேன்..!


உன் நினைவுகளோடு 

மயங்கினேன் - என் 

காதலை சொல்ல 

தயங்கினேன் - உன்

ஞாபகங்கள் அனைத்தும்

பொக்கிஷங்களாக

என் மனதில்

சிறை வைத்துள்ளேன்..!


அன்று தொடக்கம்

இன்றுவரை இனிமேலும்

உயிர் இருக்கும் வரை 

உன்னை காதலிப்பேன்

உண்மையான காதலின்

பிரிவு என்பது

மரணத்தில் மட்டுமே

அந்நாள் உன்

நினைவுகளை மட்டும்

எடுத்துச் செல்வேன்

இவ்வுலகை விட்டு..! 

Thursday, December 2, 2021

!! உன் கோபம் - என் ரசனை..!!


நீ சந்தோசமாக இருப்பதை  

பார்ப்பதை விட எனக்கு 

எந்த ஆசையும் கிடையாது 

உன் கோபத்தை 

கவனிப்பதை தவிர 

எனக்கு வேறு ரசனையும் 

கிடையாது - நான் 

சாகும் வரை உன்னை 

மனதார காதலிப்பதை 

தவிர - என் காதலில் 

வேறு எந்த 

நோக்கமும் இல்லை..!


ஒரு நொடியேனும்

உன்னுடன் பேச மாட்டேனா

என தவித்த நாட்களோ

வருடக்கணக்கு - ஆனால்

இன்று மணிக்கணக்காய்

உன்னோடு பேசும்

பாக்கியம் கிடைத்தது

என் வாழ்க்கையில் 

எனக்கு கிடைத்த

அளப்பரிய பொக்கிஷம்..!

Wednesday, December 1, 2021

!! என் காதலுக்காக..!!


அன்று தொடக்கம்

இன்று வரை - உன்னை

என் மனதில் எவ்வளவு 

உயரத்தில் வைத்திருக்கிறேன்

தெரியுமா - நீ

உன்னை பற்றி

என்னதான் சொன்னாலும்

என் மனது எப்போதும் 

உன்னை நிறைவாகவே

வைத்திருக்கும்..!


உனை நான் எப்பொழுதும்

குறைவாக நினைத்துகூட

பார்ப்பதில்லை - அன்று

என் காதலை உன்னிடம்

கூற முயன்றவேளை

உன் மனதில் வேறொருவர்

இருப்பதை அறிந்து அன்று

தொடக்கம் என் காதல்

உன் கனவுடனேயே 

வாழ்ந்து வருகின்றது..!


அன்றிலிருந்தே உனை 

தூர இருந்து காதலித்து

வந்த நான் - ஒருவேளை 

இன்று உன் சந்தோசத்தை 

இல்லாமல் செய்துவிடுவேன்

என்று நினைக்கின்றாயா..!


அப்படி ஒரு எண்ணம்

உன் மனதில் இருந்தால்

நேரடியாகவே கூறிவிடு

என் உயிரை கொடுத்தாவது

நீ நினைப்பது தவறு

என்று நிரூபித்து

காட்டுவேன் என்

காதலுக்காக..!

!! கானல் நீர்..!!


எனை பிடிக்கவில்லை

என்றால் உண்மையாகவே

எனை விட்டு விலகி விடு

சகித்து கொண்டு

தான் உன் அன்பை

நீ கொடுப்பாயானால்

என் இத்தனை வருட

காதல் - ஒரு

கானல் நீர் போலவே

இருந்திருக்கலாம்..!


நான் நன்கு அறிவேன்

உனக்கு என்மீது

அன்பு உள்ளதென்று - உன் 

வாழ்க்கை எப்பொழுதும் 

ந்தோசமாக இருக்கவே 

அன்று தொடக்கம்

உனக்காக பிரார்த்தனை

செய்த நான் இன்று

உன் சந்தோசத்தை 

கெடுப்பேன் என

நினைக்கின்றாயா..!


மனதில் எவ்வளவோ

காயங்கள் இருந்தாலும்

சில நினைவுகளே

அதற்கு மருந்தாகவும்

ஆகி விடுகிறது - இனியும்

புரிய வைக்க

விருப்பமில்லை - புரியும்போது

தெரிந்து கொள்வாய்

என் காதலை..,

அதுவே எனக்கு

போதும்..!

!! இத்தனை வருட காதல்.. !!


ஒவ்வொரு தடவையும்

புரிய வைத்து தான்

என் காதலை

நிரூபிக்க முடியும்

என்றால் - என்

இத்தனை வருட

காதலுக்கே அர்த்தம்

இல்லை..!


உன் மீது வைத்த

அதீத காதலை இன்று

உன்னிடம் கூறியும்

உன்னால் புரிந்து

கொள்ள முடியவில்லை

என்மீது தான் முற்றிலும்

தவறு - உன்னிடம்

என் இத்தனை வருட

தவத்தை சொல்லாமலே

இருந்திருக்கலாம்..!


ஆறுதலுக்காக கூட

உன்னிடம் என் காதலை 

கூறியிருக்கவே கூடாது

இன்று நான் என் காதலை 

தெரியப்படுத்தி உன்னை

கஷ்ரப்படுத்துவது போல்

ஆகி விட்டதே..!


உன்னிடம் எதிர்பார்ப்பது

உன் காதல் ஒன்றை 

மட்டுமே - ஆனால்

நீயே எனைவிட்டு போ 

என்று சொல்லாமல்

சொல்லும்போது

நானே உனைவிட்டு

விலகி செல்கிறேன்..!


என்றும் உன்மீது 

வைத்திருக்கும் காதலுடன் 

என்னால் முடிந்தவரை 

உன்னை விட்டு தள்ளியே

நிற்கின்றேன் - இதுவே

உன் விருப்பம்

என்பதால்..!

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.