எனக்கு வலி
என்பதை யாருமே
கொடுக்கவில்லை - நானே
என் இதயத்தை
காயப்படுத்தினேன்..!
எனை யாரும்
வெறுக்கவில்லை
நான் தான் அவனை
விரும்பினேன்
எனவே எல்லா
வலிகளையும் நானே
ஏற்றுக் கொள்கின்றேன்..!
காதலிப்பவர்கள்
எல்லோரும் சேர்ந்து
வாழ்வதில்லை
சேர்ந்து வாழ
முடியாதென்று
தெரிந்தும் காதலிக்கும்
இவளை பைத்தியம்
என்று சொல்லாமல்
வேறு எப்படி
சொல்வார்கள்..!
உண்மையில்லாத
காதலின் பிரிவு
ஒருபோதும் வலியை
கொடுக்காது - ஆனால்
சில தூய்மையான
உண்மையான காதல்
என்றுமே கண்ணீருடனே
பயணிக்கின்றது..!
No comments:
Post a Comment