Saturday, December 4, 2021

வாடகை வீடு அல்லவே..!!


உனை அதிகமாக

நேசித்தேன் - நேசிப்பேன்

நீ எனை எவ்வளவு 

காயப்படுத்தினாலும்

என் நேசம் எப்பொழுதும் 

மாறாது..!


உன்னிடம் நான் நேற்று

பொய் உரைத்தேன் என

நீ எனை தவறாக

நினைத்தால் - நான்

என்ன செய்வேன்..!


இதயம் ஒரு 

வாடகை வீடு

அல்லவே - அது

நினைவுகள் புதைக்கப்பட்ட

கல்லறை - உன் 

நினைவுகளை என்றுமே 

அழியாத பொக்கிஷங்களாக

என் மனதில் சிறை 

வைத்துள்ளேன் - அதற்கு 

உன் அனுமதி 

தேவையில்லை - உன் 

நினைவுகளை யாராலும் 

என் மனதில் இருந்து

திருட முடியாது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.