உனை அதிகமாக
நேசித்தேன் - நேசிப்பேன்
நீ எனை எவ்வளவு
காயப்படுத்தினாலும்
என் நேசம் எப்பொழுதும்
மாறாது..!
உன்னிடம் நான் நேற்று
பொய் உரைத்தேன் என
நீ எனை தவறாக
நினைத்தால் - நான்
என்ன செய்வேன்..!
இதயம் ஒரு
வாடகை வீடு
அல்லவே - அது
நினைவுகள் புதைக்கப்பட்ட
கல்லறை - உன்
நினைவுகளை என்றுமே
அழியாத பொக்கிஷங்களாக
என் மனதில் சிறை
வைத்துள்ளேன் - அதற்கு
உன் அனுமதி
தேவையில்லை - உன்
நினைவுகளை யாராலும்
என் மனதில் இருந்து
திருட முடியாது..!
No comments:
Post a Comment