Monday, January 17, 2022

!! கண்ணீரின் வலி..!!


வார்த்தையின் அர்த்தத்தை 

புரிந்து கொள்ள முடியாத

இடத்தில் - கண்ணீரின்

வலி மட்டும் புரிந்து

விடவா போகின்றது..!


கண்களால் பார்க்க முடியாத

கைகளால் தொட முடியாத

தூரத்திற்கு எனை விட்டு

சென்றாலும் கூட..,

எப்பொழுதும் என்

மனதிற்கு நெருக்கமாகவே

நீ இருப்பாய்..!!


"I know i miss him because every time i think of him, my heart hurts.."

!! என் நம்பிக்கை..!!


இப்படி நானில்லை

சிறு வயது முதலே

வீட்டு சூழ்நிலையோ

இல்லையென்றால்

சகோதரி கூட 

பிறக்காததால் என்னவோ

மனதில் இருப்பதை

வெளியில் சொல்ல 

முடியாமல் அப்படியே

மனதில் பூட்டி

வைத்திருப்பேன்..!


அதை யாரிடமாவது

சொன்னால் கூட

மனதில் கொஞ்சம்

பாரம் குறையும் - எனினும்

அதை எல்லோரிடமும்

சொல்ல முடியாது - ஆனால்

உன்னிடம் எப்போது 

பேச ஆரம்பித்தேனோ

அப்போதே என் வாழ்க்கையில்

நடந்த அனைத்தையும்

உன்னிடம் போட்டுடைத்தேன் 

காரணம் - என்

நம்பிக்கை நீ..,

ஏனைன்றால் அன்று 

தொடக்கம் இன்று வரை 

என் மனதில் 

முழு இடத்தையும்

பிடித்தவன் நீ

என்பதால்..!


I lost My heart to Someone.., 

Who doesn’t care..,

And Found it Crying in the Corner..!

Monday, January 10, 2022

இறுதியில் முதல் இடத்திலே..!


எத்தனை முறை 

சண்டை போட்டாலும்..,

உனை விட்டு 

விலகி போக நான் 

யோசித்ததே இல்லை - ஆனால்

நீயே என்னை போ என்று 

சொல்லும்போது

அறியாமலே கண்ணீர் துளியில் 

நனைகின்றேன் என்றும் 

ஒருதலை காதலுடன்..!


காதல் செய்து

காமம் உணர்ந்து

காயம் தந்து

காலம் கடந்து

இறுதியில்- முதல்

இடத்திலே நிற்கிறேன்

கனவில்..!

"Sometimes it’s better to be silent and smile..!"

Monday, January 3, 2022

என்றென்றுமான ஆசை..!


தண்ணீரில் கலந்த

இனிப்பு போல

உன்னுடன் நான் 

கலந்தேன்..,

தண்ணீரில் இனிப்பை

பிரிக்க முடியாது

அதுபோல் இனிப்பு

கலந்தால் தண்ணீரின் 

நிறம் மாறாது - அதுபோல

உன்னுடன் நான்

இணைந்தாலும் - என்

மனதில் என்றுமே

களங்கம் ஏற்படாது

என்றும் என் காதல்

தூய்மையானதாகவே

வாழும் - அதுவே

என் என்றென்றுமான

ஆசையும் கூட..!

காதலின் காயமா..!


நீயாகவே வந்தாய்

நீயாகவே விலகினாய்

உனக்கென்னவோ

வலி இல்லை - ஆனாலும்

எனக்கும் அப்படித் தான்

இருக்கும் என்று

நினைத்தாயே - இதுதான்

ஒரு பக்க காதலின்

காயமா..!

"My Love Only Comes Like A Dream and Leaved Like A Nightmare.. "


கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.