தண்ணீரில் கலந்த
இனிப்பு போல
உன்னுடன் நான்
கலந்தேன்..,
தண்ணீரில் இனிப்பை
பிரிக்க முடியாது
அதுபோல் இனிப்பு
கலந்தால் தண்ணீரின்
நிறம் மாறாது - அதுபோல
உன்னுடன் நான்
இணைந்தாலும் - என்
மனதில் என்றுமே
களங்கம் ஏற்படாது
என்றும் என் காதல்
தூய்மையானதாகவே
வாழும் - அதுவே
என் என்றென்றுமான
ஆசையும் கூட..!
No comments:
Post a Comment