Monday, January 17, 2022

!! என் நம்பிக்கை..!!


இப்படி நானில்லை

சிறு வயது முதலே

வீட்டு சூழ்நிலையோ

இல்லையென்றால்

சகோதரி கூட 

பிறக்காததால் என்னவோ

மனதில் இருப்பதை

வெளியில் சொல்ல 

முடியாமல் அப்படியே

மனதில் பூட்டி

வைத்திருப்பேன்..!


அதை யாரிடமாவது

சொன்னால் கூட

மனதில் கொஞ்சம்

பாரம் குறையும் - எனினும்

அதை எல்லோரிடமும்

சொல்ல முடியாது - ஆனால்

உன்னிடம் எப்போது 

பேச ஆரம்பித்தேனோ

அப்போதே என் வாழ்க்கையில்

நடந்த அனைத்தையும்

உன்னிடம் போட்டுடைத்தேன் 

காரணம் - என்

நம்பிக்கை நீ..,

ஏனைன்றால் அன்று 

தொடக்கம் இன்று வரை 

என் மனதில் 

முழு இடத்தையும்

பிடித்தவன் நீ

என்பதால்..!


I lost My heart to Someone.., 

Who doesn’t care..,

And Found it Crying in the Corner..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.