இப்படி நானில்லை
சிறு வயது முதலே
வீட்டு சூழ்நிலையோ
இல்லையென்றால்
சகோதரி கூட
பிறக்காததால் என்னவோ
மனதில் இருப்பதை
வெளியில் சொல்ல
முடியாமல் அப்படியே
மனதில் பூட்டி
வைத்திருப்பேன்..!
அதை யாரிடமாவது
சொன்னால் கூட
மனதில் கொஞ்சம்
பாரம் குறையும் - எனினும்
அதை எல்லோரிடமும்
சொல்ல முடியாது - ஆனால்
உன்னிடம் எப்போது
பேச ஆரம்பித்தேனோ
அப்போதே என் வாழ்க்கையில்
நடந்த அனைத்தையும்
உன்னிடம் போட்டுடைத்தேன்
காரணம் - என்
நம்பிக்கை நீ..,
ஏனைன்றால் அன்று
தொடக்கம் இன்று வரை
என் மனதில்
முழு இடத்தையும்
பிடித்தவன் நீ
என்பதால்..!
I lost My heart to Someone..,
Who doesn’t care..,
And Found it Crying in the Corner..!
No comments:
Post a Comment