இதயம் திறந்து
உயிர் கலந்து
இன்பம் பகிர்ந்து
துன்பம் கலைந்திடும்
காதலா எமது
இல்லையே...
இதயம் உடைந்து
துன்பம் கொண்டு
இன்பம் கலைந்து
உயிர் துறந்ததே
எமது உறவு...
Sunday, May 4, 2008
!!** எமது உறவு **!!
!! ** விடைதெரியா கேள்விகள் **!!
மழைச்சாரலின் தூறலில்
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ.....
செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே இருகரம் கோர்த்து
நாம் நடக்கையில் அலை கடல்கள்
பின்னோக்கி ஓடியதுமேனோ....
வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல்குட்டிகள் துள்ளியோடுகையில்
உன் கண்களிரண்டும் என் கண்களோடு
சில்மிஷம் செய்ததேனோ...
உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக் காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம் படபடத்ததுமேனோ...
நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து மெளனபாஷையில்
சஞ்சரிப்பதும் ஏனோ....
என்னுள் விடைதெரியா
பல கேள்விகளுக்கு விடையளிப்பாயா
ஓரே ஓரு பதில் கூறி...
மயிலிரகாய் வருடிச்செல்லும்
உன் நினைவுகள்
காலங்கள் கடந்த போதிலும்
வசந்த காலப் பறவையாய்
என்னைச் சுற்றியே
வட்டமிடுவதுமேனோ.....
செக்கச் சிவந்த செவ்வானத்தில்
தங்கமென ஜொலித்திடும்
கடற்கரையோரத்திலே இருகரம் கோர்த்து
நாம் நடக்கையில் அலை கடல்கள்
பின்னோக்கி ஓடியதுமேனோ....
வெண்பஞ்சு தேகம் கொண்ட
முயல்குட்டிகள் துள்ளியோடுகையில்
உன் கண்களிரண்டும் என் கண்களோடு
சில்மிஷம் செய்ததேனோ...
உன் மூச்சுக் காற்று - என்
மூச்சுக் காற்றோடு கலக்கையில்
என்னுள் உன்னிதயம் படபடத்ததுமேனோ...
நீ என்னோடு பேசுகையில்
மலர்களனைத்தும் நாணத்தில்
தலை சாய்ந்து மெளனபாஷையில்
சஞ்சரிப்பதும் ஏனோ....
என்னுள் விடைதெரியா
பல கேள்விகளுக்கு விடையளிப்பாயா
ஓரே ஓரு பதில் கூறி...
Friday, April 25, 2008
!!** நினைவுப் பூ **!!
காதலின் கல்லறையிலே
மலர்கிறது நினைவுப்
பூ....
பாதங்களை நனைத்துச் செல்லும்
அலைகள் போல்
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் நினைவுகள்
கண்களை நனைத்துச்
செல்கின்றன....
மலர்கிறது நினைவுப்
பூ....
பாதங்களை நனைத்துச் செல்லும்
அலைகள் போல்
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் நினைவுகள்
கண்களை நனைத்துச்
செல்கின்றன....
Thursday, April 24, 2008
Saturday, April 19, 2008
!!** மாறியது ஏன் **!!
கண்கள் கண்டதால்
காதல் கொண்ட
நெஞ்சமல்ல எமது..
இதயம் கலந்ததால் உயிர்
மாறிய உறவு எமது....
இதயத்துக்குள் நுழைந்திட்ட
உன்னால் மட்டுமே உயிரையும்
வாங்கிச் செல்ல முடிகின்றது
இலவச இணைப்பாய்..!
உன் அன்பினால் துடிதுடித்த இதயம்
உன் பிரிவினால் துடிப்பதை மறந்து
இரத்தம் சிந்துகிறது...
இன்பம் துன்பம் கண்ணீர் கலகலப்பு
அனைத்தும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்றிட
உன் காதல் மட்டும் மரத்தாணி போல்
மனதினில் என்றும் பசுமையாய் வானவில்
கோலம் போடுகின்றது....
காதல் கொண்ட
நெஞ்சமல்ல எமது..
இதயம் கலந்ததால் உயிர்
மாறிய உறவு எமது....
இதயத்துக்குள் நுழைந்திட்ட
உன்னால் மட்டுமே உயிரையும்
வாங்கிச் செல்ல முடிகின்றது
இலவச இணைப்பாய்..!
உன் அன்பினால் துடிதுடித்த இதயம்
உன் பிரிவினால் துடிப்பதை மறந்து
இரத்தம் சிந்துகிறது...
இன்பம் துன்பம் கண்ணீர் கலகலப்பு
அனைத்தும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்றிட
உன் காதல் மட்டும் மரத்தாணி போல்
மனதினில் என்றும் பசுமையாய் வானவில்
கோலம் போடுகின்றது....
Thursday, April 17, 2008
!!** பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா **!!
ஓவ்வொரு விடியலும்
சாதரணாமவே மலர்கின்றன...
பூக்களின் வாசனையில்
குயில்களின் இன்னிசையில்...
ஆனால் இன்றைய விடியலில்
எனக்கொர் ஆனந்தம்..
நான் இவ்வுலகைக் காண
உயிரை தூசென நினனத்து
என்னை கண்திறக்கை வைத்திட்ட
என் அன்னை பிறந்திட்ட திருநாள்...
நாட்கள் நகர வந்து போகும்
ஓவ்வொரு வருடமும்
நானும் புதிதாய் பிறக்கின்றேன்
என் அன்னையோடு...
ஆசையோடு தேடியலைந்து வாங்கிச்
சேமித்த பரிசில்களோடு காத்திருக்கிறேன்
அன்னையே உன் வருகைக்காய்
என் கனவுகள் - உன்
நிஜத்தோடு சேர்கையில்
என் நினைவுப் பொருளும்
உன் மடி சேர்ந்திடும்
என்றாவது ஓருநாள்...
காத்திருக்கிறேன் கண்களில்
ஆவலோடு
மனதினில் ஆசையோடு....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா
I Love U so Much அம்மா
Wednesday, April 16, 2008
Tuesday, April 1, 2008
!!** உயிர்ப்புள்ளி **!!
Monday, March 24, 2008
!! ** துடிக்கின்றேன் **!!
Friday, March 21, 2008
!!** காதலின் பரிதவிப்பு **!!
கண்களுக்குள் ஏன் நுழைந்தாய்
உயிரினில் ஏன் கலந்தாய்
இதயத்தை ஏன் தவிக்க வைத்தாய்...
என் கண்கள் வழி தோன்றிடும்
காட்சிகளால் தண்டனை அடைவது
இதயமல்லவா....
கண் மூடினால் இமை முட்டிடும்
உன் நினைவுகளில் உயிர்
சிக்கித் தவிக்கிறது - உடலோ
விம்மித் தவிக்கிறது....
உயிரினில் ஏன் கலந்தாய்
இதயத்தை ஏன் தவிக்க வைத்தாய்...
என் கண்கள் வழி தோன்றிடும்
காட்சிகளால் தண்டனை அடைவது
இதயமல்லவா....
கண் மூடினால் இமை முட்டிடும்
உன் நினைவுகளில் உயிர்
சிக்கித் தவிக்கிறது - உடலோ
விம்மித் தவிக்கிறது....
!! ** காதல் ரோஜா **!!
என் கனவுகளுக்கு
முடிவேயில்லை சுவாசமாய்
உன் நினைவுகளை
நான் சுவாசிப்பதால்..!
நிஜத்தினில் கண்ணீர்
வடித்திடும் என்
காதல் ரோஜா
நினைவினில் ராகம்
இசைக்கையில் துளிர்த்திடும்
என் வதன முகம்..!
கண்களுக்குள் ஆயிரமாயிரம்
கனவுகள் அதன் காட்சிப் பிம்பம்
உன் தேன் சிந்தும் முகம்..!
வண்டென உன் வாசனை
நான் முகர்ந்திடுவேன்
என்னுள் உன்னை கலந்திடுவேன்
நினைவாலே..!
வடித்திடும் என்
காதல் ரோஜா
நினைவினில் ராகம்
இசைக்கையில் துளிர்த்திடும்
என் வதன முகம்..!
கண்களுக்குள் ஆயிரமாயிரம்
கனவுகள் அதன் காட்சிப் பிம்பம்
உன் தேன் சிந்தும் முகம்..!
வண்டென உன் வாசனை
நான் முகர்ந்திடுவேன்
என்னுள் உன்னை கலந்திடுவேன்
நினைவாலே..!
Thursday, March 20, 2008
!! உன் நினைவுகள் !!
குளிக்கையில் நனைந்திடும்
உடலோடு நனைந்திடும்
மனம் உன் நினைவுகளில்...!
கனவாக நீ வந்தாலும்
கனவாக நீ வந்தாலும்
கலையாமல் என்றும்
என்னோடு சுவாசித்திடும்
உன் நினைவுகள்...!
உறங்கினாலும் உறங்கிடாத
நினைவுகளில் நீந்திடும்
என் விழிகளில் தேங்கிடும்
கண்ணீர் உன் நினைவுகள்...!
Monday, March 17, 2008
Sunday, March 16, 2008
Saturday, March 15, 2008
!!** என் கனவுகள் **!!
Friday, March 14, 2008
!!** விடைதேடி **!!
!!** இன்னோர் இதயம் **!!
!!** மெளனம் கலைக்காயோ **!!
காதல்
!! கனவே..!!
(((~_~))) என் கனவுகள் (((~_~)))
Thursday, March 13, 2008
என் இதயம்
Wednesday, March 12, 2008
!!! பிரிவால் கூட முடியாதம்மா !!!
~~ பூ நான் ~~
~~~~~ பூவென ~~~~~~
***** வெண்ணிலா *****
Monday, March 10, 2008
Saturday, March 8, 2008
!!! ~~~ உறவாடிடும் ~~~!!!
உன் பிரிவில் உணர்ந்தேன்
வலியின் வலிமை....
உன் நினைவில் கண்டேன்
என்னுயிரின் தவிப்பை...
உன் நிழல்களைக்
கடந்து செல்கையில்
நனைந்து போகின்றது
என்னிரு விழிகள்.....
பாறையென இருந்தேன்
மணல்த்துளியாய் சிதறடித்தாய்....
உன்னில் நான் கண்ட அன்பு
என்னில் நீ கொண்ட பந்தம்
விழி மூடித் திறக்கும் வரை
எனக்குள் இசை மீட்டிடும்
மூடிய விழிகள் திறக்காவிடின்
கல்லறையில் என் ஆன்மாவோ
உறவாடிடும்....
வலியின் வலிமை....
உன் நினைவில் கண்டேன்
என்னுயிரின் தவிப்பை...
உன் நிழல்களைக்
கடந்து செல்கையில்
நனைந்து போகின்றது
என்னிரு விழிகள்.....
பாறையென இருந்தேன்
மணல்த்துளியாய் சிதறடித்தாய்....
உன்னில் நான் கண்ட அன்பு
என்னில் நீ கொண்ட பந்தம்
விழி மூடித் திறக்கும் வரை
எனக்குள் இசை மீட்டிடும்
மூடிய விழிகள் திறக்காவிடின்
கல்லறையில் என் ஆன்மாவோ
உறவாடிடும்....
Friday, March 7, 2008
~~ உன்னாலே ~~
இதயம்
Monday, March 3, 2008
காயம்
Thursday, February 28, 2008
Subscribe to:
Posts (Atom)
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள் நன்றி இனியவள்