Friday, March 21, 2008

!! ** காதல் ரோஜா **!!

இனியவள்

என் கனவுகளுக்கு
முடிவேயில்லை சுவாசமாய்
உன் நினைவுகளை
நான் சுவாசிப்பதால்..!

நிஜத்தினில் கண்ணீர்
வடித்திடும் என்
காதல் ரோஜா
நினைவினில் ராகம்
இசைக்கையில் துளிர்த்திடும்
என் வதன முகம்..!

கண்களுக்குள் ஆயிரமாயிரம்
கனவுகள் அதன் காட்சிப் பிம்பம்
உன் தேன் சிந்தும் முகம்..!

வண்டென உன் வாசனை
நான் முகர்ந்திடுவேன்
என்னுள் உன்னை கலந்திடுவேன்
நினைவாலே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.