Saturday, March 8, 2008

!!! ~~~ உறவாடிடும் ~~~!!!


உன் பிரிவில் உணர்ந்தேன்
வலியின் வலிமை....

உன் நினைவில் கண்டேன்
என்னுயிரின் தவிப்பை...

உன் நிழல்களைக்
கடந்து செல்கையில்
நனைந்து போகின்றது
என்னிரு விழிகள்.....

பாறையென இருந்தேன்
மணல்த்துளியாய் சிதறடித்தாய்....

உன்னில் நான் கண்ட அன்பு
என்னில் நீ கொண்ட பந்தம்
விழி மூடித் திறக்கும் வரை
எனக்குள் இசை மீட்டிடும்
மூடிய விழிகள் திறக்காவிடின்
கல்லறையில் என் ஆன்மாவோ
உறவாடிடும்....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.