Friday, April 25, 2008

!!** நினைவுப் பூ **!!

இனியவள்
காதலின் கல்லறையிலே
மலர்கிறது நினைவுப்
பூ....

பாதங்களை நனைத்துச் செல்லும்
அலைகள் போல்
இதயம் துடித்திடும் பொழுதினில்
வலித்திடும் நினைவுகள்
கண்களை நனைத்துச்
செல்கின்றன....

Thursday, April 24, 2008

!!** இதயம் திறக்கிறேன் **!!


நிலவு தேய்கையில்
நானும் தேய்கிறேன்
உன் நினைவோடு...

பூக்கள் மலர்கையில்
நானும் மலர்கின்றேன்
உன் புன்னகையோடு...

கண்கள் மூடுகையில்
இதயம் திறக்கின்றேன்
உன் கனவோடு....

Saturday, April 19, 2008

!!** இருவிழியினிலே **!!

இனியவள்
உன் இருவிழியினிலே
தொலைத்திட்ட என்
பார்வையை மீட்டிட முடியாமல் - உன்
இதயத்தினிலே குடியிருக்கிறேன்
நான்....

என் உயிரை இசை
மீட்டுவாயா நீ
உன் இதயம் கொண்டு....

!!** இன்ப புதையல் **!!

இனியவள்
இரவை நிலவு தரிசிக்கையில்
இதயத்தை ஆக்கிரமித்திடும் - உன்
இனிய நினைவுகள்
இன்ப புதையல் எனக்கு

!!** மாறியது ஏன் **!!

இனியவள்
கண்கள் கண்டதால்
காதல் கொண்ட
நெஞ்சமல்ல எமது..
இதயம் கலந்ததால் உயிர்
மாறிய உறவு எமது....

இதயத்துக்குள் நுழைந்திட்ட
உன்னால் மட்டுமே உயிரையும்
வாங்கிச் செல்ல முடிகின்றது
இலவச இணைப்பாய்..!

உன் அன்பினால் துடிதுடித்த இதயம்
உன் பிரிவினால் துடிப்பதை மறந்து
இரத்தம் சிந்துகிறது...

இன்பம் துன்பம் கண்ணீர் கலகலப்பு
அனைத்தும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்றிட
உன் காதல் மட்டும் மரத்தாணி போல்
மனதினில் என்றும் பசுமையாய் வானவில்
கோலம் போடுகின்றது....

Thursday, April 17, 2008

!!** பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா **!!

இனியவள்
ஓவ்வொரு விடியலும்
சாதரணாமவே மலர்கின்றன...

பூக்களின் வாசனையில்
குயில்களின் இன்னிசையில்...

ஆனால் இன்றைய விடியலில்
எனக்கொர் ஆனந்தம்..

நான் இவ்வுலகைக் காண
உயிரை தூசென நினனத்து
என்னை கண்திறக்கை வைத்திட்ட
என் அன்னை பிறந்திட்ட திருநாள்...

நாட்கள் நகர வந்து போகும்
ஓவ்வொரு வருடமும்
நானும் புதிதாய் பிறக்கின்றேன்
என் அன்னையோடு...

ஆசையோடு தேடியலைந்து வாங்கிச்
சேமித்த பரிசில்களோடு காத்திருக்கிறேன்
அன்னையே உன் வருகைக்காய்
என் கனவுகள் - உன்
நிஜத்தோடு சேர்கையில்
என் நினைவுப் பொருளும்
உன் மடி சேர்ந்திடும்
என்றாவது ஓருநாள்...

காத்திருக்கிறேன் கண்களில்
ஆவலோடு
மனதினில் ஆசையோடு....

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா

I Love U so Much அம்மா

Wednesday, April 16, 2008

!!** உனக்கு நான் **!!

இனியவள்
உன் வலிகளை
அழகிய சிற்பமாக்கி
இன்பத்தை பரிசளித்திடும்
உளி நான் உனக்கு...!

வலிகளில் முத்தெடுத்து
இன்பக் கடலினிலே
அடித்துச் செல்லும்
அலை நான் உனக்கு...!

Tuesday, April 1, 2008

!!** உயிர்ப்புள்ளி **!!

இனியவள்
வலியே நீயென
என்னை விலக்குகிறாய்
உயிரே நீயென
உன்னை பூட்டுகிறேன்..

கண்ணீரென என்னை
ஓதுக்குகிறாய்
என் கண்ணே நீயென
அணைக்கின்றேன்...

என் துன்பம் நீயென
வெறுக்கிறாய்
என் இன்பமே நீயென
அழைக்கிறேன்...

என் வாழ்வின் கரும்புள்ளி
நீயென கூறுகிறாய்
அன்பே என் வாழ்வின்
உயிர்ப்புள்ளி நீயல்லவா..!


இனியவள்
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.