Saturday, April 19, 2008

!!** மாறியது ஏன் **!!

இனியவள்
கண்கள் கண்டதால்
காதல் கொண்ட
நெஞ்சமல்ல எமது..
இதயம் கலந்ததால் உயிர்
மாறிய உறவு எமது....

இதயத்துக்குள் நுழைந்திட்ட
உன்னால் மட்டுமே உயிரையும்
வாங்கிச் செல்ல முடிகின்றது
இலவச இணைப்பாய்..!

உன் அன்பினால் துடிதுடித்த இதயம்
உன் பிரிவினால் துடிப்பதை மறந்து
இரத்தம் சிந்துகிறது...

இன்பம் துன்பம் கண்ணீர் கலகலப்பு
அனைத்தும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்றிட
உன் காதல் மட்டும் மரத்தாணி போல்
மனதினில் என்றும் பசுமையாய் வானவில்
கோலம் போடுகின்றது....

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.