தேடித் தேடி போய்
கொடுக்க அன்பு
ஒன்றும் கடனல்லவே..,
உண்மையான அன்பு
எச்சூழலிலும்
விட்டுப் போகாது..!
அன்பை உணர்த்த
வார்த்தைகள்
தேவையில்லை
நேசம் என்பது
எந்த எதிர்பார்ப்பும்
அற்றது - சிலரிடம்
மட்டும் தான்
அது நினைவுகளுடன்
வாழ்கின்றது..!
தவிப்பு என்பது
இருவரிடமும்
இருக்க வேண்டும்
அது ஒருவரிடம்
மட்டும் இருந்தால்
முட்டாள் தனமானது..!
உன்னிடம் என் மொத்த
அன்பையும் அள்ளிக்
கொடுப்பேன் - ஆனால்
திணிக்க மாட்டேன்..,
தேடித் தேடி வருவதும்
உன்னிடம் கெஞ்சுவதும்
உன்னை கஸ்ரப்படுத்த
அல்ல - உன்மீது
வைத்த காதலை
வேறொருவரிடம்
வைக்க முடியாமல்
மட்டுமே..!