Thursday, November 18, 2021

இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்..!


உண்மைக் காதல்

மனதில் இருந்தாலே

போதுமே - நாம்

பார்த்து கொள்ளாவிட்டாலும்

மனதினுள் நம் காதல்

உயிராய் வாழ்ந்து

கொண்டேயிருக்கும்..!


உன் பெயரை கூறி

சிலிர்க்கும் இன்பமே

போதுமடா - இறந்தாலும்

மீண்டும் பிழைப்பேன்..!


உண்மையாய் உயிராய்

காதலித்துவிட்டு

வெளியே சொல்லவும்

முடியாமல் - காதலித்தவனை

மறக்கவும் முடியாமல்

தினமும் பொய்யாக

வாழும் வாழ்க்கை

நரகமே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.