எனக்கே தெரியாமல்
என்னுள் தோன்றிய
முதல் காதல் நீ
கடைசி வரை உன் கரம்
பிடித்தே இருக்க
ஆசைப்பட்டேன் - ஆனால்
கடைசி வரை என்
காதலைக் கூட சொல்ல
முடியவில்லை..!
நீ எனக்கில்லை
இது தான் நிஜம் - ஆனால்
நீ என்னருகில்
எனக்காக இல்லை
என்றாலும் - கற்பனையில்
உன் காதலோடு வாழ்ந்து
கொண்டிருப்பேன்
எந்நாளும்..!
அன்று உன்மேல் கொண்ட
காதலை நீ அறியவில்லை
இன்றோ நீ அறிவாய்
அந்த ஒரு சந்தோசம்
மட்டுமே போதும் - என்
வாழ்க்கை முழுதும்
உன் நினைவுகளுடனே
வாழ்ந்திடுவேன்..!
No comments:
Post a Comment