Monday, November 29, 2021

உன் நினைவுகளுடன்..!!


எனக்கே தெரியாமல்

என்னுள் தோன்றிய

முதல் காதல் நீ

கடைசி வரை உன் கரம்

பிடித்தே இருக்க 

ஆசைப்பட்டேன் - ஆனால்

கடைசி வரை என் 

காதலைக் கூட சொல்ல 

முடியவில்லை..!


நீ எனக்கில்லை

இது தான் நிஜம் - ஆனால்

நீ என்னருகில்

எனக்காக இல்லை

என்றாலும் - கற்பனையில்

உன் காதலோடு வாழ்ந்து

கொண்டிருப்பேன்

எந்நாளும்..!


அன்று உன்மேல் கொண்ட

காதலை நீ அறியவில்லை

இன்றோ நீ அறிவாய்

அந்த ஒரு சந்தோசம்

மட்டுமே போதும் - என்

வாழ்க்கை முழுதும்

உன் நினைவுகளுடனே

வாழ்ந்திடுவேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.