Tuesday, November 30, 2021

!! தவிப்பு !!


தேடித் தேடி போய்

கொடுக்க அன்பு

ஒன்றும் கடனல்லவே..,

உண்மையான அன்பு

எச்சூழலிலும் 

விட்டுப் போகாது..!


அன்பை உணர்த்த

வார்த்தைகள்

தேவையில்லை

நேசம் என்பது

எந்த எதிர்பார்ப்பும்

அற்றது - சிலரிடம்

மட்டும் தான்

அது நினைவுகளுடன்

வாழ்கின்றது..!


தவிப்பு என்பது

இருவரிடமும்

இருக்க வேண்டும்

அது ஒருவரிடம்

மட்டும் இருந்தால்

முட்டாள் தனமானது..!


உன்னிடம் என் மொத்த

அன்பையும் அள்ளிக்

கொடுப்பேன் - ஆனால்

திணிக்க மாட்டேன்..,

தேடித் தேடி வருவதும்

உன்னிடம் கெஞ்சுவதும்

உன்னை கஸ்ரப்படுத்த

அல்ல - உன்மீது

வைத்த காதலை

வேறொருவரிடம்

வைக்க முடியாமல் 

மட்டுமே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.