Saturday, November 20, 2021

நான் என்ன செய்வேன்..!!


பிரிவு நிரந்தரமில்லை

உணர்ந்தேன் உனைக்

கண்டதும் - ஆனால்

உனை பிரிந்திருந்த 

அத்தனை வருடங்களும் 

நான் அதிகமாக 

வெறுக்கும்

வருடங்களே..!


உனைக் காதலிக்க

ஆரம்பித்த போது

யாராகவோ இருந்த - நீ

இன்று யாவுமாய் என்

கண் முன்னே 

நிற்கின்றாய் - உனை 

இனியும் தொலைத்தால்

நான் என்ன 

செய்வேன்

அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.