Saturday, November 27, 2021

சொல்லத் துடித்த காதல்..!!


உனை பார்க்கும் போது

நான் மறந்தது என்னை 

மட்டுமல்ல - உன்னிடம்

சொல்ல துடித்த என்

காதலையும் தான்..!


காதலை சொல்வதற்கு

வார்த்தைகள் 

தேவை - ஆனால்

காதலை உணர்த்துவதற்கு

கண்களே போதுமென்று

இருந்தேன் - அன்று கூட 

என் காதல் உனக்கு

புரியவில்லையே..!


காரணமே இன்றி

உனைக் காதலித்து

விட்டேன் - இதுவரை

ஏன் எனும் காரணத்தை

தேடவும் முயற்சிக்கவில்லை

அதனாலோ என்னவோ

இத்தனை வருடங்களாகியும்

உன் மேல் கொண்ட

காதல் மாறவும் இல்லை

குறையவும் இல்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.