உனை பார்க்கும் போது
நான் மறந்தது என்னை
மட்டுமல்ல - உன்னிடம்
சொல்ல துடித்த என்
காதலையும் தான்..!
காதலை சொல்வதற்கு
வார்த்தைகள்
தேவை - ஆனால்
காதலை உணர்த்துவதற்கு
கண்களே போதுமென்று
இருந்தேன் - அன்று கூட
என் காதல் உனக்கு
புரியவில்லையே..!
காரணமே இன்றி
உனைக் காதலித்து
விட்டேன் - இதுவரை
ஏன் எனும் காரணத்தை
தேடவும் முயற்சிக்கவில்லை
அதனாலோ என்னவோ
இத்தனை வருடங்களாகியும்
உன் மேல் கொண்ட
காதல் மாறவும் இல்லை
குறையவும் இல்லை..!
No comments:
Post a Comment