Sunday, November 28, 2021

!! முதல் பார்வை..!!


உனை நேசிப்பதற்கு

ஒரே ஒரு காரணம் தான்

எந்த காரணமுமே

இல்லாமல் - உனை 

நேசித்தேன் அந்தவொரு

நேசத்துடன் என்றும்

காதலிப்பேன் - உனை

உயிராக..!


காலங்கள் கடந்து தான்

போனாலும் என்றுமே

மறக்க முடியாத 

உன் நினைவுகளை

மனதிலிருந்து 

அழிக்கவும் முடியாது 

மறக்கவும் முடியாது..!


முதல் பார்வையிலே

மனதில் நுழைந்த

உன்னை - என்

இதயம் தொட்ட 

உன் நினைவுகளை 

மறப்பேனேயானால்

அன்று தான் என் 

இறுதி நாளாக

இருக்கும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.