Thursday, November 25, 2021

நிராகரிப்பு..!


என் அதிக 

எதிர்பார்ப்பு

உன் அதிக 

நிராகரிப்பு - என்

அன்பு புரியவில்லை 

என்றால்

விளக்குவதை விட

விலகுவதே மேல்..!


நான் தேடி தேடி 

வந்து பேசுவதனால் 

அதற்கு நீ தரும் பரிசு

வேதனை மட்டுமே..!


வேண்டாம் என 

நிராகரிக்கும் உறவை 

மீண்டும் மீண்டும் 

தொல்லை பண்ணுவதனால் 

மட்டும் உண்மை அன்பு

அவர்களுக்கு புரியுமா..!


பாரமாக உன்னருகில்

இருப்பதை விட

எங்கேயும் தொலைந்தால்

உனக்கு அது தான் 

நிம்மதி என்றால்

உனக்காக அதையும்

செய்வேன்..!


புரிதல் ஒன்றே

அன்பை உணர்த்தும்

ஆனால் அதுவே

இல்லையென்றால்

வாழ்வதில் கூட

அர்த்தமில்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.