கள்ளத்தனமாய் கவனித்தேன்
அந்நாளில் - உனைக்
கண்டும் காணாதவளாய்
பாசாங்கு செய்தேன்..,
அதுவே உனை
காணாதவாறு ஏங்க
வைத்த சாபக்கேடா..!
நானின்றி உன்னால்
சந்தோசமாக இருக்க
முடியும் - ஆனால்
நீ இல்லாமல் போனால்
உன் நினைவுகளே
என்றும் என் சந்தோசம்
உனை என்றும்
சந்தோசமாக பார்த்து
கொள்வேன் - என்
ஆயுள் எல்லை வரை..!
No comments:
Post a Comment