Sunday, October 31, 2021

!! கோழையின் சாபம் !!


உனை பார்த்த

நாள்முதல்

என்னையே அறியாமல்

உனை நினைக்க

தொடங்கிய 

இதயம்..,

அன்று தொடக்கம்

இன்றுவரை

அதே காதலுடன்

மாறாமல் இருப்பது தான்

இந்த கோழையின்

சாபமா..!


காரணமே இன்றி

என் மனதில் நுழைந்தாய்

இன்றுவரை அதற்கான

காரணத்தை தேட

விரும்பியதே

இல்லை..!


உனை பார்த்து 

கொள்ளவில்லை

உன்னுடன் பேசிக் 

கொள்ளவில்லை - ஆனாலும்

உன்மீது கொண்ட

காதல் என்றுமே

குறையாது..!

Saturday, October 30, 2021

!! உன் மீதான காதல் !!


உன்னருகில் இருக்கும்

போது கூட 

தெரியவில்லை - ஆனால்

உனை விட்டு விலகிய

அந்த நாள் உணர்ந்தேன்

உன் மீதான

காதலை..!


உனை எப்போது

பார்ப்பேன் என

என் கண்கள்

தேடிய போதெல்லாம்

புரிந்து கொண்டேன்

உன் மீதான

காதலை..!


சொல்ல வேண்டிய 

தருணத்திலேயே 

சொல்லியிருந்தால்

புரிந்திருக்குமோ என்னவோ..,

அன்று சொல்ல தெரியாமல்

இழந்து விட்டேன்

உன் மீதான - என்

காதலை..!

Friday, October 29, 2021

மௌன காதல்..!!


இதயத்துள் எவ்வளவு

ஆழமான காதல் - ஆனால்

சொல்ல நினைக்கும்போது

வார்த்தைகள் யாவும்

மௌனமாகியதே..!


உனை விட்டு 

விலகி போக 

நினைத்ததே இல்லை.., 

காலம் செய்த சதி

என் காதலும்

என் மனதோடே

புதைந்து

போனதே..!


அன்று அறிந்தேன்

உன் இதயம்

வேறொறுவரிடம் என,

ஆனாலும் - என்

காதல் பொய்யுமில்லை

உனை என்றும்

நினைக்க

மறப்பதுமில்லை..!

!! காதல் கோழை !!


காதலியுங்கள் - ஆனால்

துணிவுடன் அதை

பெற்றோரிடம் சொல்ல

தைரியம் இருந்தால்

மட்டும்..!


என் காதலும்

அதைப் போன்றதே..,

சொல்ல முடியாமல்

தவித்த - ஒரு

கோழை நான்..,


சாகும் வரை உண்மையாக 

காதலிப்பாள் இந்த

கோழை உன்னை - அது

உனக்கே தெரியாமல்

போனாலும் கூட..!

Thursday, October 28, 2021

தவப் பலன்..!!


அன்று தொடக்கம் - உன் 

ஒற்றைப் புகைப்படத்துடன்

பேசிய எனக்கு

இன்று உன் தரிசனம்

கிடைத்தது - என்

இத்தனை வருட தவத்தின்

பலனா..!


காதலை உன்னிடம்

வெளிப்படுத்த முடியாமல்

தவிக்கும் ஒவ்வொரு நொடியும்

நரக வேதனை..,

இன்று சொல்லிவிட்டேன் - ஆனால்

ஏன் சொன்னேன் என

சிந்திக்க வைத்து விடாதே

அன்பே..!

ஏமாற்றங்கள்..!!


எலும்பு எனும் கம்பிக்குள்

சிக்கித் தவிக்கும்  - என்

இதயம்..,

எப்போது விடுதலை என

அறியாமலே..!


என்றைக்கோ ஒரு நாள் 

உன் பார்வையிலிருந்து 

தொலைந்து விடுவேன் 

நிரந்தரமாக..! 

அன்று வரை காதல் செய்வேன் - உனை, 

ஒருதலையாக..!


என்னை நானே

சமாதானப்படுத்தினாலும்

சில ஏமாற்றங்கள்

வலிக்கத்தான்

செய்கின்றது..!

Wednesday, October 27, 2021

!! சொல்லாத காதல் !!


இத்தனை வருடங்களாக

ஏங்கினேன் - உன்னிடம்

சொல்லிடாத காதலை

சொல்வதற்காக - இன்று 

சொல்லிவிட்டேன்

ஆனால் இருவருமே

வெவ்வேறு திசைகளில்..!


மேகங்கள் கலையலாம்..

பூக்கள் உதிரலாம்.. - ஆனால்

உன்மேல் நான் கொண்ட

காதல்

என்றும் மாறாது..,

மறையாது..!

Tuesday, October 26, 2021

!! காத்திருப்பு !!


இன்று உனைக் காண 

போகின்றேன்..,

மனதில் ஒரு பூரிப்பு

நேற்று இன்று அல்ல..,

ஆண்டுதோறும் காத்திருந்த

எனக்கு கிடைத்த

ஒரு வரப்பிரசாதம் - ஆனால் 

ஒரே நொடியில்

அந்த பூரிப்பு மாறியது

கானல் நீராக..!


தொடரட்டும் இந்த 

காத்திருப்பு

நாள் கணக்கா..,

இல்லை

மாத கணக்கா..,

இல்லை

வருட கணக்கா - சரி

இருக்கட்டுமே

ஜென்மங்களே ஆனாலும்

காத்திருப்பதில் - ஒரு 

சுகம் தான்

உனக்காக..!

இதய வலி..!!


ஆழ்ந்த உறக்கம் என்பதை

கண்டறியேன் - உன்னால்

கனவில் வாழும் 

வாழ்க்கையில்..!


நிஜத்தில் பேச 

முடியாதவைகளை

கனவினில் பேசி 

இன்பம் கொள்ளும்

இதய வலி..!


கனவில் வாழ்ந்தேன் 

உன்னுடன்..,

நிஜத்தில் வந்தாய்

இத்தனை வருடங்களில்..,

திரும்பவும் கனவில் - என்னை

விட்டு சென்றுவிடாதே..!

!! ஒரு தலைக் காதல் !!

 



கிடைக்குமா இல்லை கிடைக்காதா 

என்பதையும் தாண்டி, 

பிடித்ததைத் தேடி ஓடுவதில் - ஒரு 

சுகம் இருக்கத்தான் செய்கிறது 

இந்த ஒரு தலைக் காதலில்.!


கறையான் தின்ற புத்தகமாய் 

ஒருதலைக் காதலோடு 

நெடுங்காலமாய் காத்திருக்கும் 

இதயங்களோ பல..!

Sunday, October 24, 2021

துர்பாக்கியசாலி..!


பதினொன்பது வருடங்களின் பின்

உனைக் காணும் ஆசையில்

காத்துக் கிடந்தேன் - ஆனால்..,

உனது குறுஞ்செய்தி

எனை மீண்டும்

கனவுலகிற்கே 

அழைத்து சென்றதே..!


காத்திருப்பதும்

ஒரு சுகம் தான் காதலில் - ஆனால்

கடவுள் ஏனோ என்

வாழ்க்கையை மட்டும்

கானல் நீராகவே

செதுக்கியுள்ளார்..!!


வலியோடு மரத்துப் போன

மனமிது - உன்

நினைவுகள் மட்டுமே

நிரந்தரமென..,

இறப்பதற்கு முன்னேனும்

ஒருமுறையாவது 

உனைக் காணும் 

பாக்கியமே இல்லாத

துர்பாக்கியசாலி..!


கோபப்படுவதற்கு கூட

உரிமையில்லை எனக்கு

உன்னிடம்..,

அழுதால் கூட - சில 

வலிகள் ஆறாது..!


உன்னை எனக்கு

எவ்வளவு பிடிக்குமென

உனக்கே தெரியாது

அதனை வார்த்தையால்

சொல்லி புரிய வைக்க

முடியாது..!


இறந்த பின் - என் 

இதயத்தை

திறந்து பார்..,

இன்னும் உன் பெயர் தான்

எழுதப்பட்டிருக்கும்

என் இதயத்தில்..!





Saturday, October 23, 2021

கோழை..!!

 


திமிராய் வாழ்கின்றேன்

அடுத்தவர்களின் முன்னால்

எவர் அறிவார் - என்

மனமொரு கோழையென்று..!

Friday, October 22, 2021

தேடல்...!!




வாழ்க்கையில் நெருடலான கேள்வி..,

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த

தேடல்..!!


முதல் காதல் - அது

இறுதிவரையான - ஒரு

தேடல்..!


காலங்கள் போனால் கூட

காலாவதி ஆகாது

முதல் காதல்..!


கருவறையில் சுமந்த காதல்

கல்லறை சென்றால் கூட

மாறாது..!


கிடைக்காது என தெரிந்தும்

தேடும் வாழ்வது..

சொர்க்கத்திலும்

நரகமே..!



கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.