உனை பார்த்த
நாள்முதல்
என்னையே அறியாமல்
உனை நினைக்க
தொடங்கிய
இதயம்..,
அன்று தொடக்கம்
இன்றுவரை
அதே காதலுடன்
மாறாமல் இருப்பது தான்
இந்த கோழையின்
சாபமா..!
காரணமே இன்றி
என் மனதில் நுழைந்தாய்
இன்றுவரை அதற்கான
காரணத்தை தேட
விரும்பியதே
இல்லை..!
உனை பார்த்து
கொள்ளவில்லை
உன்னுடன் பேசிக்
கொள்ளவில்லை - ஆனாலும்
உன்மீது கொண்ட
காதல் என்றுமே
குறையாது..!