Friday, October 29, 2021

மௌன காதல்..!!


இதயத்துள் எவ்வளவு

ஆழமான காதல் - ஆனால்

சொல்ல நினைக்கும்போது

வார்த்தைகள் யாவும்

மௌனமாகியதே..!


உனை விட்டு 

விலகி போக 

நினைத்ததே இல்லை.., 

காலம் செய்த சதி

என் காதலும்

என் மனதோடே

புதைந்து

போனதே..!


அன்று அறிந்தேன்

உன் இதயம்

வேறொறுவரிடம் என,

ஆனாலும் - என்

காதல் பொய்யுமில்லை

உனை என்றும்

நினைக்க

மறப்பதுமில்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.