Tuesday, October 26, 2021

இதய வலி..!!


ஆழ்ந்த உறக்கம் என்பதை

கண்டறியேன் - உன்னால்

கனவில் வாழும் 

வாழ்க்கையில்..!


நிஜத்தில் பேச 

முடியாதவைகளை

கனவினில் பேசி 

இன்பம் கொள்ளும்

இதய வலி..!


கனவில் வாழ்ந்தேன் 

உன்னுடன்..,

நிஜத்தில் வந்தாய்

இத்தனை வருடங்களில்..,

திரும்பவும் கனவில் - என்னை

விட்டு சென்றுவிடாதே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.