உன்னருகில் இருக்கும்
போது கூட
தெரியவில்லை - ஆனால்
உனை விட்டு விலகிய
அந்த நாள் உணர்ந்தேன்
உன் மீதான
காதலை..!
உனை எப்போது
பார்ப்பேன் என
என் கண்கள்
தேடிய போதெல்லாம்
புரிந்து கொண்டேன்
உன் மீதான
காதலை..!
சொல்ல வேண்டிய
தருணத்திலேயே
சொல்லியிருந்தால்
புரிந்திருக்குமோ என்னவோ..,
அன்று சொல்ல தெரியாமல்
இழந்து விட்டேன்
உன் மீதான - என்
காதலை..!
No comments:
Post a Comment