Saturday, October 30, 2021

!! உன் மீதான காதல் !!


உன்னருகில் இருக்கும்

போது கூட 

தெரியவில்லை - ஆனால்

உனை விட்டு விலகிய

அந்த நாள் உணர்ந்தேன்

உன் மீதான

காதலை..!


உனை எப்போது

பார்ப்பேன் என

என் கண்கள்

தேடிய போதெல்லாம்

புரிந்து கொண்டேன்

உன் மீதான

காதலை..!


சொல்ல வேண்டிய 

தருணத்திலேயே 

சொல்லியிருந்தால்

புரிந்திருக்குமோ என்னவோ..,

அன்று சொல்ல தெரியாமல்

இழந்து விட்டேன்

உன் மீதான - என்

காதலை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.