Sunday, October 24, 2021

துர்பாக்கியசாலி..!


பதினொன்பது வருடங்களின் பின்

உனைக் காணும் ஆசையில்

காத்துக் கிடந்தேன் - ஆனால்..,

உனது குறுஞ்செய்தி

எனை மீண்டும்

கனவுலகிற்கே 

அழைத்து சென்றதே..!


காத்திருப்பதும்

ஒரு சுகம் தான் காதலில் - ஆனால்

கடவுள் ஏனோ என்

வாழ்க்கையை மட்டும்

கானல் நீராகவே

செதுக்கியுள்ளார்..!!


வலியோடு மரத்துப் போன

மனமிது - உன்

நினைவுகள் மட்டுமே

நிரந்தரமென..,

இறப்பதற்கு முன்னேனும்

ஒருமுறையாவது 

உனைக் காணும் 

பாக்கியமே இல்லாத

துர்பாக்கியசாலி..!


கோபப்படுவதற்கு கூட

உரிமையில்லை எனக்கு

உன்னிடம்..,

அழுதால் கூட - சில 

வலிகள் ஆறாது..!


உன்னை எனக்கு

எவ்வளவு பிடிக்குமென

உனக்கே தெரியாது

அதனை வார்த்தையால்

சொல்லி புரிய வைக்க

முடியாது..!


இறந்த பின் - என் 

இதயத்தை

திறந்து பார்..,

இன்னும் உன் பெயர் தான்

எழுதப்பட்டிருக்கும்

என் இதயத்தில்..!





No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.