பதினொன்பது வருடங்களின் பின்
உனைக் காணும் ஆசையில்
காத்துக் கிடந்தேன் - ஆனால்..,
உனது குறுஞ்செய்தி
எனை மீண்டும்
கனவுலகிற்கே
அழைத்து சென்றதே..!
காத்திருப்பதும்
ஒரு சுகம் தான் காதலில் - ஆனால்
கடவுள் ஏனோ என்
வாழ்க்கையை மட்டும்
கானல் நீராகவே
செதுக்கியுள்ளார்..!!
வலியோடு மரத்துப் போன
மனமிது - உன்
நினைவுகள் மட்டுமே
நிரந்தரமென..,
இறப்பதற்கு முன்னேனும்
ஒருமுறையாவது
உனைக் காணும்
பாக்கியமே இல்லாத
துர்பாக்கியசாலி..!
கோபப்படுவதற்கு கூட
உரிமையில்லை எனக்கு
உன்னிடம்..,
அழுதால் கூட - சில
வலிகள் ஆறாது..!
உன்னை எனக்கு
எவ்வளவு பிடிக்குமென
உனக்கே தெரியாது
அதனை வார்த்தையால்
சொல்லி புரிய வைக்க
முடியாது..!
இறந்த பின் - என்
இதயத்தை
திறந்து பார்..,
இன்னும் உன் பெயர் தான்
எழுதப்பட்டிருக்கும்
என் இதயத்தில்..!
No comments:
Post a Comment