Tuesday, October 26, 2021

!! காத்திருப்பு !!


இன்று உனைக் காண 

போகின்றேன்..,

மனதில் ஒரு பூரிப்பு

நேற்று இன்று அல்ல..,

ஆண்டுதோறும் காத்திருந்த

எனக்கு கிடைத்த

ஒரு வரப்பிரசாதம் - ஆனால் 

ஒரே நொடியில்

அந்த பூரிப்பு மாறியது

கானல் நீராக..!


தொடரட்டும் இந்த 

காத்திருப்பு

நாள் கணக்கா..,

இல்லை

மாத கணக்கா..,

இல்லை

வருட கணக்கா - சரி

இருக்கட்டுமே

ஜென்மங்களே ஆனாலும்

காத்திருப்பதில் - ஒரு 

சுகம் தான்

உனக்காக..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.