அன்று தொடக்கம் - உன்
ஒற்றைப் புகைப்படத்துடன்
பேசிய எனக்கு
இன்று உன் தரிசனம்
கிடைத்தது - என்
இத்தனை வருட தவத்தின்
பலனா..!
காதலை உன்னிடம்
வெளிப்படுத்த முடியாமல்
தவிக்கும் ஒவ்வொரு நொடியும்
நரக வேதனை..,
இன்று சொல்லிவிட்டேன் - ஆனால்
ஏன் சொன்னேன் என
சிந்திக்க வைத்து விடாதே
அன்பே..!
No comments:
Post a Comment