உனை உண்மையாக
நேசித்தது நான்
செய்த தவறா..
பேசாமல் இருக்க
உன்னால் முடியும்
என்றால் - நீ
தேடி வந்து
பேசும்வரை
என்னால் இருக்க
முடியும் என
நினைக்கின்றாயா...!!
விரல் கோர்த்திடும்
காதல் தேவையில்லை
தூரமாய் நீ
இருந்தாலும்..,
உள்ளமுருகி
உள்ளத்தால்
எல்லா நாளும்
உனை நினைக்கும்
காதல் போதும்...!!
இலகுவாக
எனை நீ
மறந்து விட்டாய்..,
ஆனாலும் மனம்
ஏங்குகின்றது
என்னிடம்
சொல்லிவிட்டு
சென்றிருக்கலாமே
என்று...!!