Tuesday, May 31, 2022

முடியுமா என்னால்...!!










உனை உண்மையாக 

நேசித்தது நான் 

செய்த தவறா..

பேசாமல் இருக்க

உன்னால் முடியும்

என்றால் - நீ

தேடி வந்து

பேசும்வரை 

என்னால் இருக்க

முடியும் என

நினைக்கின்றாயா...!! 


விரல் கோர்த்திடும் 

காதல் தேவையில்லை

தூரமாய் நீ

இருந்தாலும்..,

உள்ளமுருகி 

உள்ளத்தால் 

எல்லா நாளும்

உனை நினைக்கும் 

காதல் போதும்...!! 


இலகுவாக 

எனை நீ 

மறந்து விட்டாய்..,

ஆனாலும் மனம்

ஏங்குகின்றது 

என்னிடம் 

சொல்லிவிட்டு 

சென்றிருக்கலாமே

என்று...!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.