Sunday, February 13, 2022

நிரூபித்து விட்டாயே...!



என் எண்ணமெல்லாம் உன்னை

உயர்ந்த இடத்தில் வைத்து

பார்த்தேனே தவிர - என் மீது 

உனக்கு துளி அளவும் 

காதல் இல்லை என்பதை 

ஒரே நொடியில்

உணர்த்தி விட்டாயே...!


மனதில் காதலுடன் உனை 

ஒருபோதும் ஆசை வார்த்தையுடன்

செல்லம் - குட்டி என்று 

அழைத்தது கூட இல்லை

உனை பெயர் கூறி

அழைத்தது கூட தவறென்று கூறி

உன் மனதில் சிறு ஓரத்தில் கூட

நானில்லை என்பதை 

நிரூபித்து விட்டாயே...!
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.