என் எண்ணமெல்லாம் உன்னை
உயர்ந்த இடத்தில் வைத்து
பார்த்தேனே தவிர - என் மீதுஉனக்கு துளி அளவும்
காதல் இல்லை என்பதை
ஒரே நொடியில்
உணர்த்தி விட்டாயே...!
மனதில் காதலுடன் உனை
ஒருபோதும் ஆசை வார்த்தையுடன்
செல்லம் - குட்டி என்று
அழைத்தது கூட இல்லை
உனை பெயர் கூறி
அழைத்தது கூட தவறென்று கூறி
உன் மனதில் சிறு ஓரத்தில் கூட
நானில்லை என்பதை
நிரூபித்து விட்டாயே...!