Thursday, July 14, 2022

**ஏக்கம்..**

 









மறுபிறவியே
வேண்டாம் என
இருந்த நான்
உன்னுடன் முழு
ஆயுளும்
வாழ்வதற்காகவே
மீண்டும் ஒரு
பிறவி கிடைக்காதா
என ஒரு ஏக்கம்
இப்பொழுது...!!

முடிந்தவரை
பிரியத்தை
மட்டுமே சேமித்து
வைக்கின்றேன்
உன்னை
ஆயுள்வரை
பிரியாமல்
இருப்பதற்காக...!!

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.