Monday, November 8, 2021

உன்மீதான காதல்..!


உன்னுடன்

தொடர்பு கொள்ள

முயன்றேன்

அன்றாவது என்

காதலை

உன்னிடம்

கூற வேண்டுமென

ஆனால் அன்று கூட

மௌனமே

வார்த்தையானது..!


அன்று உனை 

பார்த்தேன் - உன்

முகநூலில்..,

வெண் நிற

தொப்பியுடன்

நீல நிற

டீ சேர்ட்டுடன்

அந்த ஒரு 

புகைப்படத்துடன்

நீண்டது

உன்மீதான

காதல்..!


அந்த ஒற்றைப்

புகைப்படம் - என்

மனதில் உனை

முழுமையாய் பதிய

வைத்ததே..!


நான் உன் அருகில்

இருந்தபோது உன்னையே

பார்த்த என் விழிகள்

ஏழு வருடங்களில் 

முகநூலில் - உன் 

புகைப்படம் கண்டதும் 

எனையறியாமலே

கண்ணீர் சிந்தியதே..!


உன்னிடம் என் காதலை

கூற மனது துடித்தாலும்

என் விதி உன்னிடம்

கூற முடியாமலே

சதி செய்தது - காலம்

செய்த கோலம்

என் காதல் - என்

மனதுடனே புதைந்து

போனதே..!


No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.