உன்னுடன்
தொடர்பு கொள்ள
முயன்றேன்
அன்றாவது என்
காதலை
உன்னிடம்
கூற வேண்டுமென
ஆனால் அன்று கூட
மௌனமே
வார்த்தையானது..!
அன்று உனை
பார்த்தேன் - உன்
முகநூலில்..,
வெண் நிற
தொப்பியுடன்
நீல நிற
டீ சேர்ட்டுடன்
அந்த ஒரு
புகைப்படத்துடன்
நீண்டது
உன்மீதான
காதல்..!
அந்த ஒற்றைப்
புகைப்படம் - என்
மனதில் உனை
முழுமையாய் பதிய
வைத்ததே..!
நான் உன் அருகில்
இருந்தபோது உன்னையே
பார்த்த என் விழிகள்
ஏழு வருடங்களில்
முகநூலில் - உன்
புகைப்படம் கண்டதும்
எனையறியாமலே
கண்ணீர் சிந்தியதே..!
உன்னிடம் என் காதலை
கூற மனது துடித்தாலும்
என் விதி உன்னிடம்
கூற முடியாமலே
சதி செய்தது - காலம்
செய்த கோலம்
என் காதல் - என்
மனதுடனே புதைந்து
போனதே..!
No comments:
Post a Comment