என் வாழ்க்கையில்
யார் வந்து சென்றாலும்
என் மனது முழுவதும்
என்றும் வாழ்வது நீ
மட்டுமே - உனக்கு
நம்பிக்கை இல்லை
என்றாலும் அது தான்
நிஜம்..!
என்னை விட்டு போகாதே
என்று சொல்லவும்
எனக்கு உரிமையில்லை
நீயே விலகி செல்ல
ஆசைப்பட்டாலும் கூட
உன்னிடம் கெஞ்சி - உன்
காதலை பெற்றுக்
கொள்ளவும் எனக்கு
விருப்பமில்லை..!
என் உண்மைக்காதல்
உனக்கு புரிந்தாலே
போதுமடா - என்
ஜீவன் என்றும்
உன் நினைவுடனே
வாழும் என் ஜென்மம்
முழுவதும்..!
No comments:
Post a Comment