Friday, November 12, 2021

என் ஜென்மம் முழுவதும்..!



என் வாழ்க்கையில்

யார் வந்து சென்றாலும்

என் மனது முழுவதும்

என்றும் வாழ்வது நீ

மட்டுமே - உனக்கு

நம்பிக்கை இல்லை

என்றாலும் அது தான்

நிஜம்..!


என்னை விட்டு போகாதே

என்று சொல்லவும்

எனக்கு உரிமையில்லை

நீயே விலகி செல்ல 

ஆசைப்பட்டாலும் கூட

உன்னிடம் கெஞ்சி - உன்

காதலை பெற்றுக்

கொள்ளவும் எனக்கு

விருப்பமில்லை..!


என் உண்மைக்காதல்

உனக்கு புரிந்தாலே

போதுமடா - என்

ஜீவன் என்றும் 

உன் நினைவுடனே

வாழும் என் ஜென்மம்

முழுவதும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.