என் ஆயுள் முழுவதும்
உன்னுடன் வாழ முடியாது
என்றாலும் - உன்னோடு
சில நாட்கள் இருக்க
வாய்ப்பு கொடுத்த
இறைவனுக்கே - என்
மொத்த நன்றிகளும்..!
யாருக்கும் பாரமாக
இருக்க கூடாது
என்பதற்காகவே
தூரமாக போக
ஆசைப்படுகின்றேன்
அங்கு எனக்கு யாரும்
இருக்க மாட்டார்கள் - அது
எனக்கு தெரியும்..,
ஆனால் சில நினைவுகள்
கூட இருக்கும் வரை
நான் தனிமையில்
வாழ்வது எனக்கு
ஒன்றும் கஸ்ரமில்லை..!
No comments:
Post a Comment