Tuesday, November 30, 2021

!! ஆயுள் முழுவதும் !!


என் ஆயுள் முழுவதும்

உன்னுடன் வாழ முடியாது

என்றாலும் - உன்னோடு

சில நாட்கள் இருக்க

வாய்ப்பு கொடுத்த

இறைவனுக்கே - என்

மொத்த நன்றிகளும்..!


யாருக்கும் பாரமாக

இருக்க கூடாது

என்பதற்காகவே

தூரமாக போக

ஆசைப்படுகின்றேன்

அங்கு எனக்கு யாரும் 

இருக்க மாட்டார்கள் - அது

எனக்கு தெரியும்..,

ஆனால் சில நினைவுகள் 

கூட இருக்கும் வரை

நான் தனிமையில்

வாழ்வது எனக்கு

ஒன்றும் கஸ்ரமில்லை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.