எவரையும் வருத்திவிட
கூடாது - இதற்காகவே
நான் நன்றாக
நடித்து கொண்டிருக்கிறேன்
வேதனைகளை வெளியே
காட்டி மற்றவர்களுக்கு
புரிய வைப்பதால்
மட்டும் என்னவாகிடும்..!
எல்லோரிடமும் சிரித்து
சந்தோசமாக இருப்பதை
போல காட்டிக் கொண்டு
என் வாழ்க்கையை
நகர்த்துகின்றேன் - ஆனால்
தனிமை என்று வரும்போது
எல்லாவற்றிற்கும்
சேர்த்து மொத்தமாக
அழுகின்றேன்..!
No comments:
Post a Comment