Friday, November 26, 2021

!! என் வாழ்க்கை..!!


எவரையும் வருத்திவிட

கூடாது - இதற்காகவே

நான் நன்றாக 

நடித்து கொண்டிருக்கிறேன்

வேதனைகளை வெளியே

காட்டி மற்றவர்களுக்கு

புரிய வைப்பதால்

மட்டும் என்னவாகிடும்..!


எல்லோரிடமும் சிரித்து

சந்தோசமாக இருப்பதை

போல காட்டிக் கொண்டு

என் வாழ்க்கையை 

நகர்த்துகின்றேன் - ஆனால்

தனிமை என்று வரும்போது 

எல்லாவற்றிற்கும் 

சேர்த்து மொத்தமாக

அழுகின்றேன்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.