உனை நேசித்த
மனதால் வேறு
எதையும் நேசிக்க
முடியவில்லை
உனை நினைக்கவும்
முடியாமல் மறக்கவும்
முடியாமல் தவிக்கிறேன்..!
வெறுப்போரை விரட்டிப்
பிடிப்பது தவறு - இது
என் புத்திக்கு
தெரிந்தாலும் இதயத்திற்கு
தெரியவில்லையே..!
முதல் காதல் எப்போதும்
தொலைவதும் இல்லை
முடிவதும் இல்லை
நான் இத்தனை
வருடங்களாக தேடிய
பொக்கிஷம் நீ..,
மீண்டும் கிடைத்தாய்
எனக்கு - ஆனால்
நிஜமான உனை
இனி மீண்டும்
நிழலாக கனவுடனே
காதலிப்பேன்..!
காதலை சொல்லாமலே
உன் நிழலோடு
வாழ்ந்திருக்கலாம் - ஆனால்
இன்று உன் நிராகரிப்பு
என் மனதை முள்ளாய்
குத்துகையில் உனக்கு
அதுவே இன்பம்
என்றால் உன்
சந்தோசமே என்
சந்தோசம் என வாழும்
என்னை நீ எவ்வளவு
வேண்டும் என்றாலும்
காயப்படுத்து..!
No comments:
Post a Comment