Thursday, November 25, 2021

கனவுடனே காதலிப்பேன்..!


உனை நேசித்த 

மனதால் வேறு

எதையும் நேசிக்க 

முடியவில்லை

உனை நினைக்கவும் 

முடியாமல் மறக்கவும் 

முடியாமல் தவிக்கிறேன்..!


வெறுப்போரை விரட்டிப்

பிடிப்பது தவறு - இது

என் புத்திக்கு

தெரிந்தாலும் இதயத்திற்கு 

தெரியவில்லையே..!


முதல் காதல் எப்போதும்

தொலைவதும் இல்லை

முடிவதும் இல்லை

நான் இத்தனை 

வருடங்களாக தேடிய 

பொக்கிஷம் நீ..,

மீண்டும் கிடைத்தாய்

எனக்கு - ஆனால்

நிஜமான உனை

இனி மீண்டும் 

நிழலாக கனவுடனே

காதலிப்பேன்..!


காதலை சொல்லாமலே

உன் நிழலோடு 

வாழ்ந்திருக்கலாம் - ஆனால்

இன்று உன் நிராகரிப்பு

என் மனதை முள்ளாய்

குத்துகையில் உனக்கு

அதுவே இன்பம்

என்றால் உன்

சந்தோசமே என் 

சந்தோசம் என வாழும்

என்னை நீ எவ்வளவு

வேண்டும் என்றாலும்

காயப்படுத்து..!


No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.