Sunday, November 7, 2021

முதல் காதலும் முடிவில்லா காதலும் நீயே..!


நிழலாய் இருந்தாய்

நிஜத்தில் வந்தாய்

ஆனால் நமக்காய்

நாம் இல்லை..!


விரும்பிய 

உன்னுடன்

சேர முடியாமல்

போனாலும் கூட..,

உன்னை விரும்பியது

என்றுமே

மாறாது..!


நடுவில் நடந்தவை

உன்னிடம் கூற

ஆசை தான் - ஆனால்

மறைக்கப்பட்ட

காதல் போலவே

அதுவும்

மறைக்கப்பட்டதாகவே

போகட்டுமே..!


என் முதல் 

காதலும்

முடிவில்லா

காதலும்

நீ மட்டுமே..,

அது என்றுமே

மாறாது..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.