Thursday, November 18, 2021

!! உன் நிழலாக..!!


அன்று தனிமையில்

பேசி சிரிக்க வைத்த

காதல் - இன்று

தனிமையை தேடி தந்து

அழ வைக்கிறது..!


பிடித்தவர்கள் மீது 

வைத்திருக்கும் அதீத

அன்பு கூட சில

நேரங்களில் 

கோபமாக தான்

வெளிப்படும்..!


அன்பு வைத்த

நெஞ்சங்களுக்கு தான்

தெரியும் பிரிவின் வலி

என்னவென்று - பயணங்கள்

முடிந்து போனாலும்

நீ நடக்கும் பாதையில்

உன் நிழலாக தொடர

இடமளிப்பாயா

என்னுயிரே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.