Thursday, November 11, 2021

!! ஒரே ஜீவன்..!!


என் இதயத்தில்

ஊஞ்சலாடும் - உன்

நினைவுகளுடன் வாழும்

பாக்கியம் ஒன்றே 

போதும் - நான்

பிறந்த பலனை

அடைய..!


நீ என் அருகில் 

இல்லை - தினமும் 

உன்னை பார்க்கவும்

இல்லை - ஆனாலும்

உன்னை தவிர உன் 

இடத்தை என் மனதில்

யாராலும் நிரப்பவே

முடியவில்லை..!


இந்த உலகில்

எனை மறந்தும் - நான்

நேசிக்கும் ஒரே ஜீவன்

நீ தானடா - ஒவ்வொரு

நாளும் இந்த காதல்

அதிகரிக்குமே தவிர

ஒருபோதும் குறையாது..!


உன் நினைவு ஒன்றே

என் ஆறுதல்..,

உனை மறக்க 

நினைத்தால் அன்றே 

என் ஆயுளுக்கும்

இறுதி நாளாகும்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.