வாழ்க்கை எதுவரையோ
அதுவரை நீ
வேண்டும் என
உன்னிடம் கூறவே
ஆசை - ஆனால்
சொல்ல தெரியவில்லை
வார்த்தைகள்
வரவுமில்லை உனை
காணும்போது..!
இந்த ஆயுள் முழுதும்
உன் காதாலே
என்னோடு - மீண்டும்
ஒரு ஜென்மம்
இருக்குமேயானால்
அதிலும் உனையே
காதல் செய்திடுவேன்
அந்த ஜென்மமாவது
உன்னுடன் வாழ்வதற்கு
பாக்கியம் கிடைக்குமா..!
நீ நடந்து செல்லும்
பாதையில் - உன்
நிழலாக எனினும்
உன்னை தொடர
அனுமதி அளிப்பாயா
என் காதலே..!
No comments:
Post a Comment