Tuesday, November 16, 2021

அனுமதி அளிப்பாயா..!!



வாழ்க்கை எதுவரையோ

அதுவரை நீ 

வேண்டும் என 

உன்னிடம் கூறவே

ஆசை - ஆனால்

சொல்ல தெரியவில்லை

வார்த்தைகள்

வரவுமில்லை உனை

காணும்போது..!


இந்த ஆயுள் முழுதும்

உன் காதாலே

என்னோடு - மீண்டும்

ஒரு ஜென்மம்

இருக்குமேயானால்

அதிலும் உனையே

காதல் செய்திடுவேன்

அந்த ஜென்மமாவது

உன்னுடன் வாழ்வதற்கு

பாக்கியம் கிடைக்குமா..!


நீ நடந்து செல்லும்

பாதையில் - உன்

நிழலாக எனினும்

உன்னை தொடர

அனுமதி அளிப்பாயா

என் காதலே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.